Thursday 30 July 2020

வரலாற்று தலைவர்கள் வரிசை 7: ரேணு சக்ரவர்த்தி



நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -7

             
                     ரேணு சக்ரவர்த்தி:
 பன்முக ஆற்றல்மிக்கத் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

 (நியூஏஜ் ஜூலை26 –ஆக.1)

    

குடும்பம்

        1917 அக்டோபர் 21ல் பிறந்தார். (யுகப்புரட்சி வெற்றியோடு பிறந்தவர் எனலாம்). அவருடைய தாத்தா பாட்டி, அனைவரும் அறிந்த பிரகாஷ் சந்திர ராய் மற்றும்

இளமை காலமும் இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் ஆனதும்

        Tripos) RPD எனச் சுருக்கமாக அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் ரஜினி பாமி தத் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட்களின் தொடர்பைப் பெற்று 1938ல் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

        ‘goosestepping’) நடைநடந்து அணிவகுத்துச் செல்வதை ரேணு தீ தன் கண்களால் பார்த்திருக்கிறார். நாஜி ஜெர்மனி, ஆஸ்திரியா நாட்டை வல்லடியாக ஆக்கிரமித்ததை அவர் தமது நண்பர்களோடு நேரே பார்த்தார். அப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் செயலாளராக இருந்த எமிலி ஷெங்கல் குறித்து அதிகம் நினைத்துக் கொண்டார் (ஆஸ்திரியப் பெண்ணான எமிலி, பின் நேதாஜியை மணந்தவர்). செக்கோஸ்லாவேக்கியா தாக்கப்பட்டு சுடன்லாந்து (செக் தேசத்தைச் சுற்றியுள்ள பகுதி) இணைத்துக் கொள்ளப்பட்டதும் நடந்தது. இவை அனைத்திற்குமாகத்தான் அவர் பாசிசத்தை வெறுத்தார். ஹிட்லர் மீது அவர் வெறுப்பு கொண்டதற்குக் காரணம், ஹிட்டரின் அதிகாரம் மிக்க வார்த்தைகள்,

        ஜான் ஸ்டரச்சே சொற்பொழிவுகளை ரேணுராய் கேட்டார். ரேணுராய், இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் இருந்த இந்திய மாணவர் சமூகங்களின் கூட்டமைப்பான ‘பெட்இண்ட்’ (FEDIND) அமைப்பின் நிறுவனப் பொதுச் செயலாளர். அமெரிக்காவில் 1938ல் நடைபெற்ற சர்வதேச இளைஞர் காங்கிரஸில் கலந்து கொண்டார்.

        பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி தனது நினைவுக் குறிப்பில் பதிந்துள்ளார். அந்த நாட்களில் அப்போது எழுப்பப்பட்ட முழக்கம்,

இந்தியாவில் இயக்கங்களில் பங்கேற்றல்

        “எனது நாட்டின் விடுதலைக்காகப் போராடுவது என்ற கொழுந்துவிட்டு எரியும் எண்ணங்களோடு நான் இந்தியா திரும்பினேன்.” கல்கத்தா பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் விரிவுரையாளராகச் சேர்ந்து 1940 முதல் 1947 வரை பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே வெகுஜன இயக்கங்கள் மற்றும் கட்சி நடவடிக்கைகளிலும் நேரத்தைச் செலவிட்டார்.

        பெண்கள் இயக்கத்திற்கான கால்கோள் இளம் பெண்களால் நடத்தப்பட்டது.

        நிகில் சக்ரவர்த்தியோடு 1942 ஜனவரி 3ம் நாள் ரேணுராயின் திருமணம் இந்தியாவில் நடந்தது

போர், வறட்சி மற்றும் ‘மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி’ (MARC)யின் எழுச்சி

போரின்போது இந்திய பர்மா எல்லைகளில் பெண்கள் மீது பிரிட்டீஷ், அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய வன்முறை கொடுமைகளுக்கு எதிரான மனு ஒன்றினை வைஸ்ராயிடம் சமர்ப்பிக்கப் பலரிடமும் கையொப்பங்களைப் பெற மற்றவர்களோடு ரேணு ராய் மும்முரமாக ஈடுபட்டார். ஜப்பானிய படைகள் முன்னேறுவதை எதிர்த்துப் போராடும்போதே பிரிட்டீஷ்காரர்கள் கிராமங்களை அழிப்பதைத் தடுக்க ரேணுராய் மற்றவர்களோடு கிராமங்களுக்கு விரைந்தார். போர் அழிவுகளோடு பஞ்சத்தின் வறட்சி சூழ்நிலையும் உருவாகியது.

இந்த நிகழ்வுகளால் வங்காளத்தில்

மகிளா சமிதிக்கு அமைப்பாளர்கள் குழு ஒன்றை ரேணு சக்ரவர்த்தியும் வேறு சிலருமாக இணைந்து ஏப்ரல் 1942ல் அமைத்தனர். அதற்கு இளா ரெய்டு (Ela Reid) அமைப்புச் செயலாளர். இப்படி ரேணு சக்ரவர்த்தி, மணிகுந்தள சென், இளா போன்றோர் திறன்மிக்க அமைப்பை உருவாக்கி, பல ஆயிரம் உறுப்பினர்களோடு பெண்களின் குழு பிராந்தியம் முழுவதும் கிளை பரப்பியது.

பெண்களின் குழுவோடு, ஆதரவற்ற பெண்களுக்கான மறுவாழ்வு அளிப்பதற்காக “நாரீ சேவா சங்கம்” ஒன்றும் அமைக்கப்பட்டது. அதன் செயல்பாட்டின் மையப் புள்ளியாக ரேணு தீ(தி)யின் தாய் பிரம்ம குமாரி ராய் விளங்கினார். அவர் அனைத்திந்திய பெண்கள் மாநாடு அமைப்பிலும் செயல்பட்டார். நிகில் சக்ரவர்த்தியின் தாய் ஷைலஜா சக்ரவர்த்தியும் பெண்களின் விழிப்புணர்வுக்காகப் பாடுபட்டவராவார்.

கல்கத்தாவில் 1943 ஏப்ரல் 27 –28 தேதிகளில் நடந்த பெண்களின் சுய பாதுகாப்புக் குழுவின் முதல் மாநாட்டில் ரேணு தீ உரையாற்றினார். முதல் மாகாண மாநாடு 1943 மே மாதம் 8ல் கல்கத்தாவில் நடந்தபோது அதில் ரேணு தீ உணர்வு பொங்க பேசி, தெளிவான சித்திரத்தை முன்நிறுத்தினார். சட்டமன்ற கட்டடம் நோக்கி, வறட்சி நிவாரணம் கோரி 5000க்கும் பெண்கள் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது. ரேணு சக்ரவர்த்தி குடிமக்கள் பாதுகாப்பு அரண், முதல் உதவி மையங்கள்,

மணிகுந்தளா சென் (தனியாக எழுதப்பட வேண்டிய தனித்துவமான கம்யூனிஸ்ட் பெண் தலைவர், சிறை சென்ற சுதந்திரப்போராட்ட வீரர், கட்சி பிளவுக்குப் பிறகு அதிகம் சமூக சேவை, பெண்கள் இயக்கத்தில் ஈடுபட்டவர்) தனது பெண்கள் இயக்கப் போராட்ட நினைவுகளை “அன்றைய அந்த நாட்கள்” (வங்க மொழியில் ‘In Search of Freedom: An Unfinished Journey) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

ரேணு தீ ச்சாட்ரி சங் (Chhatri Sangh -- பெண் மாணவர்கள் அமைப்பு)டன் இணைந்து பணியாற்றி 1940ல் நடந்த அதன் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் சரோஜினி நாயுடு.

நவகாளியிலும் பிற இடங்களிலும் 1946-47 மதக் கலவரங்கள் நடந்தபோது, தீவிரமாகத் தொண்டாற்றினார். அது பற்றி எழுதும்போது,

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW) அமைத்தல்

       

        WIDF)த்தின் இணைப்புக் குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. பெண்கள் சுய பாதுகாப்புச் சமிதி அதனுடைய இணைப்புச் சங்கமாகும். கோபன்ஹேகன் நகரில் 1953 ஜூன் மாதம் நடைபெற இருந்த உலக பெண்களின் மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதிநிதிகளுக்கான அழைப்பு, வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பிய ரேணு சக்ரவர்த்தி மூலம் எடுத்து வரப்பட்டது. WIDF அமைப்பு குறித்துப் பிரச்சாரம் செய்து பிரபலமாக்கி, 30 பிரதிநிதிகளை உலக மாநாட்டிற்கு அழைத்து வர ரேணு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். அந்த வேண்டுகோளைப் பரிசீலிக்க 1953 மார்ச் 10ல் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. WIDF வேண்டுகோளில் 12 மாநிலங்களின் பிரதிநிதிகளும், ரேணு சக்ரவர்த்தியும், அருணா ஆசப் அலியும் கையெழுத்து இட்டிருந்தனர். பெங்காலி மார்கெட், புதுடெல்லியில் அதற்கான தயாரிப்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. 1953 மே 9ல் தேசியத் தயாரிப்பு மாநாடு நடத்தி, அனைத்திந்திய பெண்கள் மாநாட்டிற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

“பழைய நாட்களை அசைபோடல்”

       நினைவுக் குறிப்புகள்

        NFIW 1974 மலர் ஒன்றில், “முதல் மாநாடு கல்கத்தாவில் 1954ல் நடைபெற்றது;

        1954 ஜூன் 4ம் தேதி துவங்கி முறைப்படி NFIW இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் அமைக்கப்பட்டது. ரேணு சக்ரவர்த்தி துணைத் தலைவரானார். சம்மேளனத்தின் அமைப்பு விதிகளை வரைந்தார். சம்மேளனத்தின் 1962 மாநாட்டில் அவர் பொதுச் செயலாளராகத் தேர்வாகி 1970வரை அப்பொறுப்பில் இருந்தார்.

பாராளுமன்றத்தில் ரேணு தீ(தி)

        பசீர்கட் தொகுதியில் போட்டியிட்டு மேற்கு வங்கத்தில் இருந்து வெற்றிபெற்ற ஒரே பெண் உறுப்பினரானார். இரண்டாவது, மூன்றாவது முறையும் வெற்றி பெற்றார். 1962ல் நாட்டிலேயே அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற உறுப்பினர் அவராவார். தனது தொகுதியை அவர் புறக்கணித்ததில்லை, இதனால் மலைவாழ் மக்கள் உட்பட அனைத்துப் பகுதி மக்களும் அவரிடம் அன்பு செலுத்தினர்.

 பாராளுமன்றத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவம். ஒருமுறை கடுமையான வாக்குவாதம், பாராளுமன்றத்தில் புயல் வீசியது எனலாம். ஒரு சாதாரண சம்பவத்திற்காக ஏன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இவ்வளவு ஆவேசமாக நடக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ள இயலாத நேரு மிகவும் சங்கடப்பட்டு, அவரை தன் அறையில் விவாதிக்க அழைத்தார். அப்போது அவர் பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சி குழு துணைத் தலைவர். ரேணு தீ பிரதமரிடம், நடந்த சம்பவம் மக்களவை சபாநாயகர் போக்கின் எதிர்விளைவு என எடுத்துரைத்து விட்டு, உடனடியாகப் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை மாற்றி, அந்த அறையில் மாட்டியிருந்த நேருவின் படத்தைப் புகழ்ந்துரைத்தார். (சூழ்நிலையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவரது பண்பைக் காட்டும் நிகழ்வுகளில் ஒன்று அது). பிரதமருடன் விவாதித்து அவர் திரும்பியபோது, பிரதமர் அறையில் மாட்டியிருந்த படம் நேரு கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார், கூடவே விவாதம் குறித்த ஒரு கடிதத்தோடு.

பங்களா காங்கிரஸ் தலைவர் அஜாய் முகர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில்இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசில் 1969ல் அவர் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

கட்சியில் தலைவராக

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 1958 அமிர்தசரஸ் காங்கிரஸில் ரேணு தேசியக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க அவர் சிறிதும் தயங்கவில்லை. கட்சி பிளவிற்கு பின் மத்திய கட்டுப்பாடு குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950களில் ஜாம்ஷெட்பூர் போன்ற இடங்களில் தொழிலாளர் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கு கொண்டு சிறை தண்டனையையும் அனுபவித்தார்.

  என்ற அவர் எழுதிய புத்தகம், 1940 முதல் 50 வரையான பெண்கள் இயக்கங்கள் குறித்த விரிவும் ஆழமும் மிக்க ஒருங்கமைக்கப்பட்ட

        1994 ஏப்ரல் 16ம் நாள் மண்ணுலகை விட்டு மறைந்தார்.

பெண்கள் இயக்கத்திற்குச் சுடரும் ஒளி விளக்கான ரேணு சக்ரவர்த்தியின் புகழ் என்றென்றும் செங்கொடி போல் சிவந்து ஒளிரும்.

--தமிழில் : நீலகண்டன்,

 


No comments:

Post a Comment