நியூஏஜ் தலையங்கம் (நவ.6 –12)
பாசிசமும் முசோலினியும்
நமக்கு
முன் மீண்டும் வந்து நிற்கிறது அக்டோபர் 31, நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நாளில்தான்,
முசோலினி ஆயுதம் தாங்கிய தனது இளைஞர் ‘கருஞ்சட்டை படை’யுடன் பேரணியாக இத்தாலி தலைநகர்
ரோம் நகரில் நுழைந்தான். அதன் முன்பே 1922 அக்டோபர் 28ல் இத்தாலிய மன்னர் விக்டர் இமானுவேல்,
முசோலினியை நாட்டின் பிரதமராக ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். ஆனால் அனைத்தும்
அத்தோடு முடியவில்லை. ஜனநாயகத்தை அழிப்பது என்ற ஒற்றை லட்சியத்துடன் முசோலினி 1925ல்
படுகொலை அட்டூழியம் ஒன்றை நடத்த, காட்டுமிராண்டித்தனமான கொலைகள் அவனது பயங்கர ஆட்சியை
நிறுவ உதவின. ஏதேச்சிகாரத்தை நோக்கி நடந்த அவனது ஆட்சியின் வேர்களில் பயங்கரத்தைக்
கட்டியமைத்தான் என்ற உண்மைக்கு மாறாக அதற்கு அவன் ‘முழுமையான அரசு’ (டோட்டாலிடேரியன்
ஸ்டேட்) என்று பெயரிட்டான். சர்வாதிகாரத்திற்கு அப்படி ஒரு ஒரு பெயர்!
இந்தியர்களாகிய நமக்கும் 1925ம் ஆண்டு முக்கியமானது. அதே ஆண்டில்தான் செப்டம்பர் 27ல் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் பிறந்தது, (கம்சனுடன் அவன் எதிரி கிருஷ்ணன் பிறந்தது போல) கூடவே அதனை வீழ்த்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
1925 டிசம்பர் 26ல் பிறந்தது. முசோலினி 1925 அக்டோபர் 28ஐ “பாசிசப் புரட்சி தினம்” என்று பிரகடனம் செய்தான். ஆனால் அந்தப் புரட்சி ஒருபோதும் நிறைவேறவில்லை. அதற்கு முன்பே, பாசிசத் தாக்குதல்கள் மற்றும் முடிவற்ற இடையூறுகளையும் மீறி ஏப்ரல் 6ல் PCI அல்லது இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல்களில் பங்கெடுத்தது; பல இடங்களை வென்றதுடன் 2,68,000 வாக்குகளையும் பெற்றது. வெற்றி பெற்றவர்களில் அன்டனியோ கிராம்சி மிகப் பிரபலமான தலைவராவார். 1920களின்
பத்தாண்டுகள், மட்டியோட்டி நெருக்கடி வெடித்தபோது குறிப்பிடத்தக்க சில இன்னல்களை ஏற்படுத்தியது.
பாசிசவாதிகளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மட்டியோட்டி ஒரு சோஷலிச நாடாளுமன்றவாதி.
இத்தாலி நாடு கடும் முரண்பாடுகளில் சிக்கி கூறுபட்டது. பாசிசத்திற்கு எதிரான சக்திகள்
தலைநிமிரத் தொடங்கின, (இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன உறுப்பினரும் செயலாளருமான)
பால்மிரோ டோக்ளியாட்டி மற்றும் அன்டோனியோ கிராம்சி போன்றவர்கள் பாசிச ஆட்சிக்கு எதிராக
ஐக்கிய முன்னணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து எழுதத் தொடங்கினர்.
1931ல் ஜெர்மனியில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் 4வது கட்சிப் பேராயத்தில் இத்தாலியத் தலைவர் டோக்ளியாட்டி ‘ஐக்கிய முன்னணி’
என்ற முழக்கத்தை முன் வைத்தார்; அவரது முன்முயற்சியில் புரட்சியாளர்கள், டிராட்ஸ்கியவாதிகள், சோஷலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் ஒன்றாகத் திரண்டு 1934 ஆகஸ்ட் 17ல் ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர். விரைவில் 1935ல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது பேராயத்தில் (பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவரும், 1935முதல் 1943வரை கம்யூனிஸ்ட் அகிலத்தை வழிநடத்தியவருமான) ஜார்ஜ் டிமிட்ரோ, (படம்) பாசிசத்தைத் தோற்கடிக்க நாடுகள் மற்றும் வர்க்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார்.இந்த நாட்களின்போதுதான் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டோக்ளியாட்டி, “பாசிசம் தனது பலத்தை எங்கிருந்து பெறுகிறது” என்ற அவரது
கட்டுரையில், ‘பாசிசத்தை அதனுடைய உண்மையான நிறங்களில் அங்கீகரிக்க வேண்டும்’ என எழுதினார். அதாவது பாசிசத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். அர்த்தமற்ற அறிக்கைகள் மற்றும் கிளிப் பிள்ளை கோட்பாடுகளை மீண்டும் திரும்பச் செய்வதற்கு எதிராக அவர் எச்சரித்தார்; பிற நாடுகளின் எதார்த்த சூழல்களில் இத்தாலியப் பாசிசத்தின் உதாரணத்தை எந்திரத்தனமாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரித்தார். இத்தாலியில் எவை எல்லாம் உண்மையோ, அப்படித்தான் அவை பிற நாடுகளிலும் உண்மையாகும்; ஆனால் அவை எப்போதும் அப்படியே இருப்பதில்லை எனவும் அழுத்தமாகக் கூறினார். அவர்
தனது உரைகளில் பாசிசத்தின் தோற்றம், அதன் கட்டமைப்பு மற்றும் வர்க்க குணாம்சம் முதலியவற்றை
ஆராய்ந்து அவற்றைக் குறித்தும், ஜெர்மனியின் நாசிசம் மற்றும் இத்தாலியின் பாசிசம் இவற்றுக்கு
இடையேயான வேறுபாடுகளையும் எடுத்துக் கூறினார். பாசிசத்தை அதனது உண்மையான கலரில் தோலுரித்துக்
காண வேண்டும், அது ஒரு போதும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் இன்னொரு வடிவம் இல்லை. என்னதான்
ஜனநாயகத்திற்கு வரையறைகள் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஜனநாயகம் ஒருபோதும் பாசிசத்தின்
மற்றொரு வடிவம் அல்ல. மேலும் பாசிசம், ஒடுக்குமுறை குணத்துடன் மக்கள் ஆதரவு இல்லாத
ஜனநாயக ஆட்சி போன்றதல்ல. பாசிசத்தை டோக்ளியாட்டி, ஆணாதிக்கச் சக்திகளின் பயங்கரவாதச்
சர்வாதிகாரம் என்றும், அதுதான் ஏகாதிபத்தியவாத மற்றும் நிதிமூலதனப் பிற்போக்கு அம்சங்கள்
எனவும் வரையறுத்தார். பாசிசம், ஏகபோக மூலதனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவான ஜனரஞ்சகக் களத்தைத்
தயாரிக்கிறது.
மேலும், பெட்டி அலுவலக ஊழியர்கள் (பெட்டி என்ற பிரெஞ்ச் வார்த்தைக்கு மதிப்புக் குறைந்த, தாழ்வான, இரண்டாம் தரம் என்று பொருள்படும்), மற்றும் தங்கள் சொந்த அடையாளம் இழந்த சிவில் பணியாளர்கள் மத்தியில் பாசிசம் தனது பரவலான ஜனரஞ்சக ஆதரவு அடித்தளத்தைத் தயாரிக்கிறது என டோக்ளியாட்டியும் பிற கம்யூனிஸ்ட்களும் 13வது ப்ளீனம் மாநாட்டில் வற்புறுத்தினர். இது குறித்து லெனின், பாசிசம் பரிணாமடைந்த தொடக்க காலத்தில் வளர்ச்சிபெற்ற அந்த ஜனநாயக அம்சங்களிலிருந்து ஏகாதிபத்தியவாதிகளும் ஏகபோக முதலாளிகளும், முதல் உலகப் போரின்போதே, அதைப் புறக்கணித்து ஒதுங்கிச் சென்றதைக் கண்டதாகக் கூறுகிறார்; மேலும் அதற்கு மாறாக அவர்கள் அவற்றின் மீது தாக்குதல் தொடுக்கவும் முயன்றார்கள் என்கிறார்.
பதின்ஆண்டுகள் பல பல கடந்த பிறகும், இந்த உண்மைகள் மாறாது நிலைத்துள்ளன. இந்தியாவே ஓர் உதாரணம்தான். நமது நாட்டின் பொருளாதாரப் பரப்பின் மீது நிதிமூலதனம் ஆட்சி செலுத்துகிறது. இதற்குமுன் காணாத மட்டங்களுக்குச் சுரண்டலின் உயர் மட்டம் சென்றுள்ளது. பாசிசம், கார்ப்பரேட் அரசுக் கோட்பாட்டை வழங்கியது; ஆனால் கார்ப்பரேட்- மயமாக்கல் அதுவே, முரண்பாடுகளின் ஊற்றுக் கண்ணாக நிரூபித்துள்ளது. மக்களின் பிரதிநிதித்துவம் கண்ணுக்குப் புலப்படும் ஒரு வெளியாக நாடாளுமன்றம் பயன்படுகிறது. அதனைப் பாசிசம், தனது தாக்குதலுக்கான முதலாவது இலக்குகளில் ஒன்றாக ஆக்கியது. மக்கள் கூட்டத்தின் மீது சட்டங்கள் சுமையாக ஏற்றப்பட்டு, இதற்கு மேலும் சுமக்க இயலாது என்ற நிலைக்கு ஆக்கியுள்ளது. [தற்போது நம் நாட்டில்[ அதிரடியாகக் கொண்டுவரப்படும் வேளாண் சட்டங்கள், தொழிலாளர் குறுங்குறிகள், குடியுரிமை சட்ட திருத்தம் போன்று மக்கள் மீது ஏற்றப்படும் சட்டங்களின் சுமையைச் சுட்டிக் காட்டலாம். –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது] ஆனால் மக்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை, அவர்களின் நன்நம்பிக்கை இன்னும் உயிர்ப்போடு உள்ளது – காரணம், அவர்களுக்குத் தெரியும் சரித்திரம் முசோலியையும் விட்டுவைக்கவில்லை. அவரும் மக்கள் திரளைச் சந்திக்க வேண்டி வந்தது, மற்றவர்களை முசோலினி எப்படி நடத்தினாரோ அதனையே மக்களும் அவருக்குத் திரும்ப வழங்கினர்.
(1945 ஏப்ரல் 27-ல் மாறுவேடத்தில், முசோலினி சுவிட்சர்லாந்துக்குத் தப்ப முயன்றபோது, இத்தாலி அரசு எதிர்ப்புப் படை வீரரால் அடையாளம் காணப்பட்டு, மறுநாள் மிலன் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார்; மக்கள் கூடும் சதுக்கத்தில் பெரிய கம்பத்தில் கட்டித் தொங்க விடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி கிளாரா பெட்டாசி, அவளுடைய தம்பி மார்செலோ பெட்டாசியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரது அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இதே கதிதான். ஹிட்லருக்கும் அதே முடிவுதான்)
வரலாறு
சர்வாதிகாரிகளுக்குக் கோர முடிவையே வழங்கியது!
No comments:
Post a Comment