Friday 25 September 2020

CATல் BSNL ஐடிஏ பென்ஷனர்கள் வழக்கு குறித்து தோழர் பட்டாபி பதிவின் தமிழாக்கம்

 

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (CAT) முன்

BSNL ஐடிஏ பென்ஷனர்கள் வழக்கு குறித்து


--ஆர். பட்டாபிராமன்

 

மேற்கண்ட தலைப்பில் 23 பக்கங்கள் உடைய விஷயத்தை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் நான் படிக்க நேர்ந்தது. இந்த மனு (ஒரிஜினல் அப்ளிகேஷன் OA) மனுதாரர்களுக்குப் பென்ஷன் ரிவிஷனை மறுத்த அநீதியை எதிர்த்து, நீதி வழங்கிடக் கோருவது. அவர்களின் முயற்சி வெற்றி அடைய எனது வாழ்த்துகள்!

மனுவில் சில எதார்த்தமான உண்மைகள் பிழைபட வைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுவதால் அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சிறு பதிவு. என் எண்ணங்களைப் பகிரும் முன், சட்டபூர்வ விஷயங்களில் எனது புரிதலின் வரம்பை நான் பணிவோடு ஏற்பதுடன், சட்டஅறிவின் முன்ஜாக்கிரதை விவேகம் எனக்கு இல்லை என்பதையும் தெரிவிக்கிறேன். ஆனால் உண்மை என்பது உண்மைதான், அதைப் புரிந்து கொள்ள பொது அறிவைப் பயன்படுத்துகிறேன். பொதுவான கருத்துருக்கள் மற்றும் மனுவில் வலியுறுத்தப்படும் நீதி இந்தப் பகிர்வில் முன்வைக்கப்பட்டு, அவை மீதான எனது புரிதலை எழுதியுள்ளேன்.

1.)      பத்தி 4.44 உண்மையில் சரியானது அல்ல.

ஒரிஜினல் அப்ளிகேஷன் (மனு என்று இனி கூறப்படும்) பத்தி 4.4 ல் “முன்பே குறிப்பிடப்பட்டதைப் போல, விதி 37-ஏ, ‘தானே தனி இனமான தனித்துவமுள்ள குழு’வாகப் (sui-generis) – பொதுத்துறையில் இணைந்து ஏற்கப்பட்ட (absorbee) பென்ஷனர்கள் அடங்கிய -- குழுவை ஏற்படுத்துகிறது. (அந்தக் குழுவின்) அனைத்து அப்சார்ப்டு BSNL பென்ஷனர்களும் அரசு சேவையில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி (அதன் பின்னர்) உச்சபட்சமாக 17 ஆண்டுகள் BSNLல் பணியாற்றியுள்ளனர்” என்றும் மனுவின் அந்தப் பத்தி குறிப்பிட்டுள்ளது.

01--10--2000 அன்று, ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரெகுலர் மஸ்தூர் தோழர்கள் – 10ஆண்டுகளுக்கும் குறைவான அரசு சேவைக் காலத்துடன் –இருந்தார்கள். எந்த ஓர் அரசு ஊழியரும் பென்ஷன் பெறுவதற்கு அவர் குறைந்த பட்சம் 10ஆண்டுகள் அரசு சேவை ஆற்றியிருக்க வேண்டும். ஆனால் இங்கு BSNLலில் நாம், பத்து ஆண்டுகளுக்கும் குறைவான அரசு சேவை உடைய அவர்களுக்கும் பொதுத்துறை BSNLலோடு இணைந்த சேவை காரணமாக அரசு பென்ஷனைப் பெற்றுள்ளோம். இதற்காகவே தோழர் குப்தாவை நான் வணங்குகிறேன்!

2.மனுவின் பத்தி 4.46ல், “அப்சார்ப்டு BSNLஐடிஏ பென்ஷனர்களின் பென்ஷன் மாற்றி அமைக்கப்படாத காரணத்தால் –அவர்களைப் போன்று அதே கிரேடில் பணியாற்றி ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களான CDA பென்ஷனர்களை விட—அவர்கள் குறைவான விகிதத்தில் பென்ஷன் பெற்று வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. உதாரணத்திற்கு, (BSNL ஊழியரான) இந்த மனுவின் 2வது மனுதாரர் அவரைப் போன்ற மத்திய அரசு பென்ஷனரைவிட 01-01-2017அன்று ஒரு மாதத்திற்கு ரூ1677/= குறைவாகப் பெறுகிறார்”.

இந்தப் பத்தியை நான் விமர்சனம் செய்யவில்லை; ஆனால் சமச் சீரான புரிதலைப் பெற இங்கே மற்றொரு ஒப்பீட்டை உதாரணமாகத் தருகிறேன். ஹையர் செலெக்ஷன் கிரேடு மத்திய அரசு ஊழியர் மற்றும் என்இ 11 ஊதிய விகித BSNL ஊழியர் இருவருக்கும் இடையே (2020 மே மாதத்தில்) அவர்கள் பெற்ற பென்ஷன் ஒப்பீட்டைக் கீழே தருகிறேன். (2016 ஏழாவது மத்திய ஊதியக்குழு விகிதத்தில்) . மத்திய அரசு ஊழியர் 2018ம் ஆண்டு மே மாதம் பணிஓய்வு பெற்றவர். (2007 இரண்டாவது பிஆர்சி விகிதத்தில்) என்இ 11 BSNL ஊழியர் 2016ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றவர்.

 

மாதம்

பென்ஷன் விபரம்

7th CPC 2016

அடிப்படையில்

மத்தியஅரசு ஊழியர்

2nd PRC 2007 அடிப்படையில்

BSNL ஊழியர்

மே 2020

அடிப்படை பென்ஷன்

     ரூ31,100

      ரூ15,070

    

CDA/ IDA                    

     ரூ  5,287

      ரூ23,706

     

கம்யூடேஷன்

     ரூ12,440

      ரூ  6,028

     

வரவு வைத்த பென்ஷன்

     ரூ23,947

      ரூ32,748

  

மேலே உள்ள பட்டியல்படி ஹையர் செலெக்க்ஷன் கிரேடில் 2018ல் ஓய்வு பெற்ற இன்றைய 7வது மத்திய ஊதியக்குழுவின் மத்திய அரசு பென்ஷனர், அவரைவிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஓய்வுபெற்ற 2வது பிஆர்சி BSNL ஐடிஏ பென்ஷனரை ஒப்பிட இன்றைய தேதியில் ஒரு மாதத்திற்கு ரூ8,801 குறைவாகப் பெறுகிறார்.

2.)        DOT /DOPPW

          7வது மத்திய ஊதியக் குழுவின் முடிவுகள் எதுவும் BSNL ஐடிஏ பென்ஷனர்களுக்கும் பொருத்தமுடையதாக நீட்டிக்க, – கிராஜூவிட்டியை உயர்த்தி வழங்குவதற்காக DOT தேதி 16-03-2017யில் வெளியிட்டதைப் போன்ற -- ஒரே ஒரு உத்தரவு அதே 1-1-2016 தேதியிலிருந்து என DOT யிடமிருந்து வழங்கப்பட்டால் போதும். மேலும் எதிர்காலப் பென்ஷனர்களுக்கும் பொருத்தமுடையதாக வேண்டின், ‘யாரெல்லாம் அந்தத் தேதியில் ஊழியர்களாக இருந்தார்களோ’ என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். ஆனால், பஞ்சப்படியோடு இணைத்து கிராஜூவிட்டியை உயர்த்துவது, மற்றும் குறைந்தபட்ச பென்ஷன் தொகை ரூ9000 என்பன போன்ற சில அம்சங்களைச் சேர்ப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்று, பென்ஷனை மாற்றியமைக்கும் (பென்ஷன் ரிவிஷன்) உத்தரவை வழங்கினால் மட்டுமே சாத்தியமாகும்.

          தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்டிஐ-யின்படி பென்ஷன் ரிவிஷன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு DOPPW (பென்ஷன் மற்றும் பென்ஷனர்கள் நல இலாக்கா) அளித்த பதில் நாம் எல்லோரும் அறிந்ததே. நினைவூட்டலுக்காக அதன் முக்கியமான பகுதி பின்வருமாறு:

DOPPWயின் அலுவலகக் கடித எண் தேதி 4-8-2016 பொருத்தமான பத்தி

        ஒரு பொதுத்துறையில் நிரந்தரமாக இணைந்த அரசு ஊழியர்கள் தொடர்ந்து தனியாக அரசிடமிருந்து பென்ஷன் பெறுவார்கள் என்றால், அத்தகைய அப்சார்ப்டு ஊழியர்களின் பென்ஷன் இவ்வுத்தரவுகளின்படி மேம்படுத்தப்படும்…” இந்தப் பத்தியின் உத்தரவு ப்ரோ ரேட்டா (சரிசம விகிதாசாரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்) பென்ஷனர்கள் பற்றிப் பேசுகிறது.

7வது மத்திய ஊதியக்குழு முடிவுகள் பொருந்துவது பற்றிய ஆர்டிஐ கேள்விக்கு DOPPWஅளித்த 2018 ஜூலை 18 தேதியிட்ட பதில்:

“…. ஐடிஏ பாணி அடிப்படையில், அரசு மற்றும் பொதுத்துறையில் ஆற்றிய இணைந்த சேவைக்காகப் பென்ஷன் பெறும் அப்சார்ப்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு இந்த உத்தரவுகள் பொருந்தாது.”

7வது மத்திய ஊதியக்குழு உத்தரவுகள்  (அலுவலகக் கடிதம் தேதி 4-8-16 மற்றும் தேதி 12-05-2017 தொடர்புடைய பத்திகள்) பொருந்துவது பற்றிய மேலும் ஒரு ஆர்டிஐ கேள்விக்கு விளக்கம் அளித்து DOPPW தந்த10-08- 2018  தேதியிட்ட பதில்:

வெளிப்படையாக எதார்த்தத்தில் இந்த உத்தரவுகள் -- அரசு மற்றும் பொதுத்துறையில் ஆற்றிய இணைந்த சேவைக்காக ஐடிஏ விகிதத்தில் பென்ஷன் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு -- பொருந்தாது.”

4) விதி 37-Aவின் துணைவிதி 4ஐ எதிர்த்(து வழக்காடு)தல்

        துணைவிதி (4) : பொதுத்துறை நிறுவனத்தில் இணைவதற்கான அரசு ஊழியர்களின் ஆப்ஷன்கள் அரசால் ஏற்கப்பட்ட தேதியிலிருந்து அத்தகைய (அப்சார்ப்டு) ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என்ற அந்தஸ்தை இழந்து, அவர்கள் அரசு சேவையிலிருந்து ஓய்வு பெற்றதாகக் கருதப்படுவார்கள்.

          வரையறுக்கப்பட்ட எனது அறிவின்படி, 15-12-1995 தேதியிட்ட தீர்ப்பு (துணைவிதி 4ஐ எதிர்த்து வழக்காடுவதற்கு உதவ) இதற்குப் பொருத்தமுடையது இல்லை. 15-12-1995 தீர்ப்பு என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் அதற்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பு கீழே தரப்படுகிறது, (அதைத் தெரிந்து கொண்டால்) புரிதல் எளிதாகும் என்பதற்காக.

          பின்னணி: (பொது விஷயங்களுக்காக நீதிமன்றங்களில் வழக்காடும்) காமன் காஸ் என்ற பொதுநல அமைப்பு, பென்ஷனில் கம்யூட் செய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு பென்ஷனை மீண்டும் 12 ஆண்டுகளில் திரும்ப அளிக்க வேண்டும் என்பதற்காகச் சட்டரீதியான போரை நடத்தியது. அந்த வழக்கின் தீர்ப்பை நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா 1986 டிசம்பர் 9ம் நாள் வழங்கினார்.

          வழக்கு இதுதான்:அரசமைப்பு சட்ட ஷரத்து 32ன் கீழ் மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவில், கம்யூடேஷனாகப் பென்ஷனர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் (மாதாந்திரப் பென்ஷனில்) பிடித்தம் செய்ய மத்திய அரசுக்கு அனுமதி வழங்கும் குறிப்பிட்ட சட்டப் பிரிவின் ஷரத்துக்களைச் செல்லாதென ரத்து செய்து அறிவிக்கக் கோரியுள்ளனர். மேலும் கம்யூடேஷன் திட்டத்தில் பொருத்தமாகச் சீர்திருத்தவும் உத்தரவிடக் கோரியுள்ளனர்; அதற்குக் காரணமாக, வாழ்க்கைமுறை மேம்பாடு அடைந்ததன் பலனாய் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதைக் கணக்கில் கொள்ளும் வகையில் திட்டத்தில் மாற்றம் வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். கம்யூடேஷனாக வழங்கப்பட்ட மொத்த தொகையைச் சாதாரணமாக 12 ஆண்டுகளில் திரும்ப வசூலிக்கப்பட்டு விடுகிறது. எனவே கம்யூடேஷன் பங்கு பிடித்தத்திற்கான காலத்தை 15 ஆண்டுகளான நிர்ணயிப்பது நியாயமானதல்ல” என வலியுறுத்தியுள்ளனர்.

          அந்த வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டல்: “எனவே நாங்கள் கருதுவது யாதெனில், படைப் பிரிவு அலுவலர்களுக்கு மட்டும் ஒரு கால வரையறையைத் தனியே நிர்ணயிக்கத் தேவையில்லை; அவர்களும் மற்ற சிவில் பென்ஷனர்கள் போலவே நிர்ணயிக்கப்பட்ட காலமான 15 ஆண்டுகள் முடிந்த பிறகு, தங்களது பிடிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு (கம்யூட்டெட்) பென்ஷன் பங்கினை முழுமையாகப் பெறுவதற்கு உரிமை உடையவர்கள். அவர்களுக்கும் உத்தரவு அமல் தேதி 01-04-1985 ஆகும்.”

இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதற்காக வெளியிடப்பட்டதே DOPPWன் உத்தரவான, கடித எண்“ DOPPW  OM  மார்ச்5, 1987  

பொருள்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூட்டெட் பங்கினைத் திரும்ப அளித்தல் – உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக”

அந்த அலுவலகக் கடிதத்தில் கீழ்க்கண்ட பத்தி இடம் பெற்றுள்ளது:

       “4: மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அப்சார்ப் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் யாரெல்லாம் பென்ஷனில் மூன்றில் ஒரு பங்கு கம்யூட் செய்து அதன் அடிப்படையில் மற்ற ஓய்வூதிய இறுதிப் பயன்களைப் பெற்றார்களோ / அல்லது பெற விருப்பம் தெரிவித்தார்களோ அவர்களுக்கு இந்த உத்தரவுகளின் அடிப்படையிலான எந்தப் பலனையும் பெறுவதற்கு உரிமை கிடையாது, காரணம் (பொதுத்துறையில் அப்ஸார்ப்ஷனுக்குப் பிறகு), அவர்கள் மத்திய அரசு பென்ஷனர்களாக  நீடிக்கவில்லை (ceased to be CG Pensioners)

          மேற்கண்ட இந்தப் பத்தி ஒரு பிரச்சனையை உருவாக்கியதன் காரணமாக மேலும் சட்டரீதியாக வழக்கினைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து வெளியானதே உச்சநீதிமன்றத்தின் 1995 டிசம்பர் 15ம் தேதியிட்ட தீர்ப்பு

தீர்ப்பினை எழுதியவர் : V.K. பெஞ்ச் -- நீதியரசர் வெங்கடசுவாமி K

வழக்கு இதுதான் :இந்திய அரசமைப்புச் சட்ட ஷரத்து 32ன் கீழ் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை வாதங்களின்போது ரிட் மனுக்களின் சார்பாக வாதாடிய அறிவார்ந்த வழக்கறிஞர்கள் இரண்டு விஷயங்களில் நிவாரணம் கோருவதோடு தங்கள் வழக்கை வரையறுத்தனர்; ஒன்று, இந்த நீதிமன்றத்தின் காமன் காஸ் தீர்ப்பின்படி (ரிஜிஸ்டர்டு சொஸைட்டி மற்றும் பிறர் –எதிர்-- யூனியன் ஆஃப் இந்தியா (1987) 1 SCR 497) மூன்றில் ஒரு பங்கு கம்யூட்டெட் பென்ஷனைத் திரும்ப முழுமையாக்குதல்; இரண்டு, மேலும் அது தொடர்பாக இந்திய அரசின் பென்ஷன் மற்றும் பென்ஷனர்கள் நல இலாக்கா வெளியிட்ட O.M. 3412/86 உத்தரவின்-- DOPPW  OM 5th மார்ச் 1987 -- பத்தி 4 ஐ செல்லாது என அறிவித்தல்”

வழக்கின் தீர்ப்பு வழங்கிய வழிகாட்டல்: “கீழ்க்கண்ட காரணங்களால், காமன் காஸ் வழக்கில் மூன்றில் ஒரு பங்கு கம்யூடெட் பென்ஷன் பங்கினைத் திரும்ப அளிப்பதைப் பொருத்த அளவில் இந்த நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டலின் பலன்களைப் பெற மனுதாரர்களுக்கு உரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம். மேலும் அது தொடர்பான DOPPW  OM 5.3.1987ன் பத்தி 4 ஐ செல்லாது என அறிவிக்கிறோம். வழக்குச் செலவு இல்லை.”

          இங்கே வழக்கு – மூன்றில் ஒரு பங்கு கம்யூடேஷனை (15ஆண்டுகளுக்குப் பின்) மீட்டளிப்பது மற்றும், உத்தரவை அதே தேதியிலிருந்து அமலாக்கும் விஷயத்தில் -- மத்திய அரசு பென்ஷனர்கள் பெறும் பலனை அப்சார்ப்டு பென்ஷனர்களுக்கும் நீட்டிப்பது பற்றியதுதான். (வழக்கு தொடுக்கப்பட்ட) முரண்பாட்டின் சாராம்சம் (contention), (OM உத்தரவின் 4வது பத்தியின்)  ‘அவர்கள் அரசு பென்ஷனர்களாக நீடிக்கவில்லை’  என்ற விஷயம் பற்றியது அல்ல.

5) DOT OM dt16-3-2017

விதி 37-A (8) கூறுவதாவது : பொதுத்துறை நிறுவனத்தில் அப்சார்ப்டு செய்யப்பட்ட ஒரு நிரந்தர அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பம் ஓய்வூதியப் பலன்களை (பென்ஷன் கம்யூடேஷன், கிராஜூவிட்டி, குடும்ப பென்ஷன் அல்லது எக்ஸ்ட்ராடினரி பென்ஷன் உட்பட) பெறுவதற்கு தகுதி உடையது; இணைந்த சேவைக்கான அடிப்படையில் வழங்கப்படும் அந்தப் பென்ஷன் பலன்கள் –அவற்றைக் கணக்கிடுவதற்கு (அவர் பொதுத்துறை நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறும்போது அல்லது அவரது இறப்பின்போது அல்லது அவரது ஆப்ஷனுக்கு ஏற்ப) அமலில் உள்ள பார்முலாபடி – மத்திய அரசு சேவை காலத்திற்கான பலன்களை, மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப, பெறலாம்.

இங்கே DOTயின் அலுவலக OM தேதி 16-3-2017, பார்முலாவில் மாற்றம் குறித்து எதுவும் பேசவில்லை என்பதை நாம் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய தேவை உள்ளது.

DOTயின் OM தேதி 16-3-2017 :

பொருள்: 7வது மத்திய ஊதியக் குழுவின் சிபார்சுகள் அமலாக்கம்: BSNL/ MTNL அப்சார்ப்டு ஊழியர்களுக்கு விதி 37-ஏவின் கீழ் பொருந்துவது குறித்து

இந்த அலுவலக உத்தரவு, ஜனவரி 2016 அன்று அல்லது பிறகு ஓய்வுபெறும் BSNL அப்சார்ப்டு ஊழியர்களுக்கு டிஏவை இணைக்காமல் (without DA linked), உச்சபட்ச கிராஜூவிட்டி வரம்பை ரூபாய் 20 லட்சமாக மாற்றி அமைக்க மட்டும் பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவின் 3வது பத்தி கூறுவதாவது,

            01-01-2016 முதல் (அமலில் உள்ள) பென்ஷன் / குடும்ப பென்ஷன் பார்முலாவில் எந்த மாற்றமும் இல்லை. எனவே BSNL/ MTNL அப்சார்ப்டு ஊழியர்கள் தொடர்ந்து அதே பார்முலாபடி பென்ஷன் பெறுவார்கள்.

விதி 37-A (9) கூறுவதாவது : துணைவிதி (8)ன் கீழ் ஓர் ஊழியரின் பென்ஷன், ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது சராசரி ஊதியம் இதில் எது அவருக்கு அதிகப் பலன் அளிப்பதாக இருக்குமோ அதன்படி கணக்கிடப்படும்.

2017க்கு பின் ஓய்வுபெற்ற பென்ஷன்தாரர்களின் பென்ஷன் இந்தச் சேவை விதிப்படி (SR) நிர்ணயிக்கப்படுகிறது. 2017க்கு பின் ஓய்வுபெற்ற இந்தப் பென்ஷன்தாரர்களின் பென்ஷனைத் திருத்தி மேம்படுத்துவது, ஊதிய மாற்றம் இல்லாமல், இந்தச் சேவை விதியின்படி சாத்தியமற்றது.

6) 2017க்கு பின் பென்ஷன் அப்டேஷன் பிரச்சனை:

          கடந்த கால பென்ஷனர்களுக்குக்கூட 7வது மத்திய ஊதியக்குழு முடிவுகள் பற்றிய கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால் 01-01-2017லிருந்து ஓய்வுபெறும் ஊழியர்கள் அதனைப் பெறுவதில்லை; காரணம், அந்த ஊழியர்கள் ஊதிய மாற்றக் கமிட்டி (பிஆர்சி) அல்லது இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையின் கீழ் வருகிறார்கள் என்பதுதான். எனவே இரண்டு (கேட்டகரி) வகையான பென்ஷனர்கள் – 7வது மத்திய ஊதியக்குழுவின் கீழ் வரும் கடந்த கால பென்ஷனர்கள், (இரண்டு,) பிஆர்சி அல்லது இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையின் கீழ் வரும் எதிர்கால பென்ஷனர்கள் – உள்ளனர். (இப்படி இரண்டு வகையான பென்ஷனர்கள் இருக்கும்) இது நாக்ரா வழக்கின் உயிர் மூச்சான உணர்வுகளுக்கு எதிரானது. இந்தக் கோரிக்கை 2017க்குப் பிறகு ஓய்வு பெறும் பென்ஷனர்களுக்கு எதிரான பாகுபாட்டை உண்டாக்கும் என்பதை நன்றாக அறிந்தே (பென்ஷனர்) அசோஸியேஷன் (மற்றும் வேறு சில அமைப்புகளும்) இந்தப் பாகுபாட்டின் மீது சட்டபூர்வமான முத்திரையைப் பெற விரும்புகிறது.

7) டிலிங்கிங் பிரச்சனை குறித்து

DOTக்கு  DOPPW இலாக்கா எழுதிய 8-3-2019 தேதி அலுவலக கடிதத்தில் குறிப்பாகக் கீழ்க்கண்ட அவதானிப்பை முன் வைத்துள்ளது:

     “…கடந்த கால பென்ஷனர்களின் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் பட்சத்தில், அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பென்ஷன் தொகை, தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் ஓய்வுபெறும்போது அவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் பென்ஷன் தொகையைவிட, அதிகமாகி விடும். இதனால் BSNL/ MTNL நிறுவனங்களில் (கடந்த கால பென்ஷனர்கள் புதிதாக ஓய்வுபெறும் பென்ஷனர்களை விட கூடுதல் பென்ஷன் பெறுகின்ற) பென்ஷன் முரண்பாடு நிலைமை உண்டாகும். எனவே தொலைத் தொடர்பு இலாக்கா (DOT) இந்த முரண்பாட்டை எவ்வாறு தீர்க்க உத்தேசித்துள்ளது என்பது பற்றிய அவர்களது கருத்துருவைக் கொண்டுவர வேண்டிய அவசியம் எழுந்துள்ளது”  

எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் 11-3-2020ல் அளிக்கப்பட்ட பதில்:

            “பணியில் இருக்கும் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் அவர்கள் ஓய்வுபெறும்போது வழங்க வேண்டிய பென்ஷன் கணக்கிடப்படுவதால், அதனோடு BSNL அப்சார்ப்டு ஊழியர்களின் பென்ஷன் மாற்றப் பிரச்சனை இணைந்துள்ளது. பணியில் இருக்கும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம், ஊதிய மாற்றத்தின் (pay revision) காரணமாக, மாற்றப்படும்போது பென்ஷனும் மாற்றியமைக்கப்படும்.”

மேற்கண்ட பதிலிலிருந்து, ஊதிய மாற்றம் இல்லாமல் பென்ஷன் மாற்றத்தை வழங்குவதன் மூலம் ஒரு முரண்பாடான எந்த நிலையையும் உண்டாக்கிவிட DOT இலாக்கா விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. இன்றைய தேதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட 2017க்குப் பிறகு ஓய்வு பெற்ற பென்ஷனர்களுக்கு –ஒவ்வொரு மாதமும், 2026 மற்றும் அதற்கு அப்பாலும், ஊழியர்கள் ஓய்வுபெறுவதால் மேலும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் பென்ஷனர்களுக்கு—ஒரு முரண்பாடான (பென்ஷன்) நிலையை ஏற்படுத்த ஓய்வூதியர்களின் சங்கம் / சங்கங்கள் விரும்புகிறது.

எனது வரையறுக்கப்பட்ட அறிவின்படி, DOPPW அலுவலக 8-3-2019 தேதியிட்ட கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள முரண்பாடு, ஏக காலத்தில் ஊழியர்களுக்கான ஊதிய மாற்றமும், அந்த பார்முலாபடியே 01-01-2017 முதலான பென்ஷனர்களின் பென்ஷனும் மாற்றி அமைக்கப்படுவதன் மூலமாக அன்றி, வேறு எப்படியும் தீர்த்து வைக்கப்பட முடியாது. மாறாக, பென்ஷனர் அசோஸியேஷன்களின் கோரிக்கை – எந்த நீதிமன்றத்திலோ, ஏதோ ஒரு மட்டத்தில் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் -- வலியுறுத்தி ஏற்கப்படுமானால், உண்டாகும் முரண்பாட்டையும் தலைகீழாக இணைப்பதன் மூலமாகவே தீர்க்க முடியும். அது ரிவர்ஸ் லிங்கிங் என்பதைத் தவிர வேறில்லை. (ஊதிய மாற்றம் மற்றும் பென்ஷன் மாற்றம் இரண்டையும் தனித்தனியாக்கி) டி-லிங் செய்வது என்ற கேள்விக்கு விடை காண்பது, எதிர்கால ஐடிஏ பென்ஷனர்கள் இருக்கும் வரை, சாத்தியமில்லை.

பதிவிட்ட நாள்: 23-09-2020          

வலைப்பூவில் பதிவிட்டது : ஆர் பட்டாபிராமன்BSNL ஐடிஏ பென்ஷனர்

                                                                                                                             தமிழாக்கம்: நீலகண்டன்,

                                                                                                                               என்எப்டிஇ, கடலூர்              


           

 

 

No comments:

Post a Comment