--ஆனி ராஜா
பொதுச் செயலாளர்,
NFIW
உலகம் முழுவதும் பெண்கள் இயக்கமும் பாலினப் பாகுபாடு
குறித்த கேள்வியும் நீண்ட பாதையைக் கடந்து வந்துள்ளன. ஆணும்
பெண்ணும் இணைந்ததே சமூகம். அதில் இரு பாலினத்தவர்களும் பல்வேறு பிரிவுகள், மட்டங்களில்
அந்தஸ்தில் பாகுபாடுகளைச் சந்திக்கின்றனர். ஆனால் அனைத்துச் சமூகப் பிரிவுகளிலும் இத்தகைய
ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ள பெண்களையெல்லாம் ஒரே தொகுப்பாகப் பெண்ணினம்
உருவகப்படுத்தப்பட்டு பாகுபடுத்தப்படுகிறது. பெண்களும் தங்களுக்கிடையில் நிலவும்
பல்வேறு பாகுபாடுகளுடன் பெண்ணினம் என்ற தொகுப்பாகச் சமூகம் மற்றும் அரசியலில் விளிப்புநிலையில்
கட்டாயப்படுத்தி தள்ளப்படுகின்றனர். இதுதான் சமூகக் குறுக்கு வெட்டுத் தோற்றம். மேலும்
அவர்கள் (மட்டுமே) கலாச்சாரம் மற்றும் தேசத்தின் மாண்பு, நாடு
–அரசு மற்றும் குடும்பத்தின் கௌரவத்திற்குப் பொறுப்பானவர்களாகக் குறுக்கப்பட்டு
விடுகின்றனர். பல்வேறு சமூக குடியிருப்பு இடங்களில் பயன்படுத்தப்படும்
பெண்களுக்கான மொழியின் வார்த்தைக் கட்டமைப்பு மற்றும் மரபுத் தொடர்களிலும்கூட, அது
வீடாயினும் உலகமாக இருந்தாலும், அவர்கள் ஒதுக்கப்பட்டு பாகுபடுத்தப்படுவதே
அடையாளமாகிறது.
கூட்டாகப்
பெண்கள் தொடுத்த போராட்டங்களின் விளைவாய், பொதுவாகச் சமூகம், ஜனநாயகம் மற்றும்
நீதியை நோக்கி பெரும் பாய்ச்சலில் முன்னேறச் செய்திருக்கிறது; பொதுச்
சமூகம் மேலும் அனைவரையும் உள்ளிணைத்ததாக,
பிரதிநிதித்துவம் உள்ளதாக மறுதகவமைக்கச் செய்துள்ளது. பெண்கள் இயக்கம்
பல்லாண்டுகளாக நடத்திய உரையாடல்
வேலைவாய்ப்பு, ஊதியம், ஊட்டச்சத்து, வசதிகள் கிட்டுதல், வன்முறை மற்றும்
பிரதிநித்துவம் குறித்தவைகளில் நிலவும் ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு குறித்த
கேள்விகளைத் திறமையாக முன்னேடுத்துச் சென்றுள்ளது; அதே நேரத்தில் பாலினப் பண்பு,
ஒப்புதல், தன்னுடல் மீது உரிமை,வன்முறை போன்றவற்றில் பல புதிய நுணுக்கங்கள் மற்றும்
பரிமாணங்களை மையமாகக் கொண்டு அவற்றை முற்போக்கு அரசியலில் வெற்றிகரமாக அறிமுகம் செய்தது.
ஆணாதிக்கம், இனவெறுப்பு தேசியவாதம் மற்றும் முதலாளித்துவச் சித்தாந்தத்தால் இயக்கப்படும்
பாலின அதிகாரக் கட்டமைப்புகளைப் பெண்கள் இயக்கம் தொடர்ந்து எதிர்த்துச் சவால்விடுத்தது.
இந்திய மாதர்
தேசியச் சம்மேளனம் (NFIW) 70வது ஆண்டில்
நுழைகிறது. அந்தப் பொன்னான நாள் 1954 ஜூன் 4ல் கல்கத்தாவில் 13 மாநிலங்கள்/ பிராந்தியங்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 600 பெண்கள் இந்தச் சம்மேளனத்தை ஒரு பரந்துபட்ட, குழுப்
போக்கு இல்லாத, அனைத்துச் சமூகப் பின்னணிகளிலிருந்தும் வந்த பெண்கள் அமைப்புகள் மற்றும்
தனிநபர் பெண்களுக்கான மாபெரும் மேடையாக அமைத்தனர். மாதர் சம்மேளனம், பெண்களின் சமத்துவத்திற்காகப்
பணியாற்ற உறுதி கொண்டது; மேலும் முக்கியமாக இதனைப் பரந்துபட்ட சமூக -அரசியல் மற்றும்
பொருளாதாரச் சமத்துவத்தின் பிரச்சனைகளிலிருந்து பிரிக்க முடியாத கேள்வியாகவும் பார்த்தது.
எனவே நமது அமைப்பு நிறுவப்பட்டதிலிருந்து சோஷலிசம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை
இலட்சியங்களில் தெளிவான நம் பற்றுறுதியை நாம் வெளிப்படுத்தி வருகிறோம்.
கடந்த எழுபது
ஆண்டுகளில், பெண்கள் அமைப்புகளில் மிகப் பெரிய அமைப்பாக, 27 மாநிலங்களில் கிளைகளுடன்,
நாம் உருவாகி கிளைபரப்பியுள்ளோம். ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்ட
விழுமியங்கள், அதன் உறுதிமொழிகள் மற்றும் உரிமைகளுக்காகவும் நாம் எண்ணிறந்த போராட்ட
இயக்கங்களை நடத்தியுள்ளோம். மாதர் சம்மேளனம் எப்போதும் சமாதானம், வகுப்பு நல்லிணக்கம்
மற்றும் சர்வதேச ஒருமைப்பாடு போன்றவற்றிற்காக நிற்கிறது.
அமைப்பு உருவான வரலாறு
பல்வேறு
தேசிய, சர்வதேசிய வளர்ச்சிப் போக்குகளின் செல்வாக்கால் மாதர் சம்மேளனம் உருவானதன் வரலாறு,
விடுதலைப் போராட்டக் காலத்திற்கு முன்பிருந்து தொடங்குகிறது. குறிப்பாக, 1940களின்
தொடக்க காலத்தில் பல்வேறு பிராந்தியங்களில் அமைக்கப்பட்ட பெருந்திரள் பெண்கள் அமைப்புகளைச்
சொல்லலாம். சத்ரீ சங் (ஒருகுடை அமைப்பு 1940) அவற்றில் ஒன்று. அதன் பின், வங்கத்தில்
மகிளா ஆத்ம ரக்ஷா சமிதி (MARS), மணிப்பூரில்
மகிளா சம்மேளினீ (1940 பெண்கள் மாநாடு), கேரள மகிளா சங்கம் (1943), ஆந்திர மகிளா சங்கம்
(1943), பஞ்சாப் பெண்கள் தற்காப்பு லீக் (1940), டெல்லி மகிளா சங் (1942) போன்ற அமைப்புகள்
நிறுவப்பட்டன. இது தவிர, சர்வதேசிய அளவில் 1945ல் அமைக்கப்பட்ட பெண்கள் சர்வதேசிய ஜனநாயக
சம்மேளனம் (WIDF), மற்றும்
1953ல் கோபன்ஹெகனில் நிறைவேற்றப்பட்ட ‘பெண்கள் உரிமைகள் பற்றி கோபன்ஹெகன் பிரகடனம்’
இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் நிறுவப்பட்டதில் முக்கிய பங்காற்றியது.
நாட்டின்
பல்வேறு பிராந்தியங்களிலிருந்து பல அரசியல் கருத்தோட்டங்களைச் சார்ந்த 25 பெண்கள் அடங்கிய
குழு கோபன்ஹெகன் பேராயத்தில் கலந்து கொண்டது. மாநாட்டிலிருந்து திரும்பும்போது அவர்கள்,
வேலைவாய்ப்பில் சம உரிமை, சமவேலைக்குச் சம ஊதியம், சமூகக் காப்பீடு, நிலம் மற்றும்
சொத்தில் சம உரிமை, திருமணம் மற்றும் குழந்தைகள் தொடர்பாகவும், தாய் மற்றும் குழந்தைக்கு
அரசுப் பாதுகாப்பு, பேறுகால விடுமுறை மற்றும் பலன்கள், கல்விக்கான உரிமை உள்ளிட்டவைகள்
குறித்து மாநாட்டின் பிரகடனம் எழுப்பிய பல கோரிக்கைள் மீது தாங்களும் போராட்டங்களைத்
தொடங்க வேண்டியதை உணர்ந்தனர்.
புகழ்பெற்ற நம் தலைவர்கள்
மாதர் சம்மேளனத்தின் நிறுவன உறுப்பினர்களாக விமலா டெங், B B சகுந்தலா (பஞ்சாப்), டாக்டர் ஜெ பி லெட்சுமி, ஜமாலுன்னிஸா பேகம் (ஆந்திரா), ஆனி மாஸ்கிரீன், கே ஆர் கௌரி (அம்மா), சுசீலா கோபாலன் மற்றும் , P யசோதா (கேரளா), மனோரமா சேடின், ஹேனா போரா (அசாம்), டாக்டர் துங்கம்மா (மணிப்பூர்), ஃபிர்ஸோ வாடியா, மஞ்சு காந்தி, தாரா ரெட்டி, அகல்யா ரங்கேகர் (மகாராஷ்டிரம்), சாரா லதீஃப், அனுசுயா ஞான்சந்த்,
அருணா ஆஸஃப் அலி, விமலா கபூர் (டெல்லி), மோகினி ஸ்ரீநிவாஸ்தவ், ஹஜ்ரா பேகம் (உபி), புஷ்மமாயி போஸ், கமலா முகர்ஜி, கனக் முகர்ஜி, ரேணு சக்ரவர்த்தி, பங்கஜ ஆச்சார்ய, மணிகுந்தளா சென், வாணி தாஸ் குப்தா (வங்கம்) உள்ளிடவர்கள் இருந்தனர். அவர்கள் எல்லாம் இந்தியாவின் பெணகள் இயக்கத்தின் பெரும் தலைவர்களும் நாடு நன்கறிந்த விடுதலைப் போராட்ட வீரர்களும் ஆவர். இராமேஸ்வரி
நேரு, ஹன்னா சென், ராஜ்குமாரி அமிர்த் கவுர், கமலாதேவி சட்டோபாத்தியா, சுபத்ரா ஜோஷி,
புஷ்பமோயி போஸ் போன்ற பல புகழ்பெற்ற தலைவர்களிடமிருந்து மாதர் சம்மேளனம் ஆதரவையும்
ஊக்கப்படுத்தலையும் பெற்றது.
பிராந்திய சமிதிகள் பாடுபடும் உழைக்கும் பெண்களைத் தங்கள் நீரோட்டத்தில் அழைத்து வந்து அன்றைய காலத்தின் பெண்கள் இயக்கத்திற்குப் புதிய தீவிர வழிகாட்டலைத் தந்தன. இந்த அமைப்புகள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் பெண்களின் முன்முயற்சியில் திரட்டி
அமைக்கப்பட்டன. அவைகளே கேந்திரமான கிளை அலகுகளாகி, பிற்காலத்தில் இந்திய மாதர் தேசியச் சம்மேளனத்தை அமைத்தன. இச்சமிதிகள் பெண்களின் பிரச்சனைகளைப், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான, விரிந்த அரசியல் போராட்ட இயக்கங்களுடன் இணைத்தன. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளைக் குண்டுவீசித் தாக்கிய போதும், அதைத் தொடர்ந்த உணவு நெருக்கடி மற்றும் பஞ்சத்தின்போதும் அவர்கள் அதற்குப் பதிலளிக்கும் வகையில் கிளர்ந்து எழுந்தனர். இந்தச்
சமிதிகள் மற்றும் அனைத்திந்திய பெண்கள் மாநாடு (AIWC)
அமைப்பும் இணைந்து பல கூட்டு இயக்கங்களை நடத்திய போதும், அவர்களுக்கு இடையிலான சித்தாந்தக்
கருத்து முரண்பாடு தோன்றி, விடுதலைக்குப் பிறகு பிளவு வளர்ந்தது; அதுவே பெருந்திரள்
மாற்று தேசிய மேடையை அமைக்க வழிகோலியது.
மாதர் சம்மேளத்தின் செயல்பாடு
தோன்றிய
அதன் தொடக்கம் முதல் மாதர் சம்மேளனம் பல்வேறு பெண்கள் அமைப்புகளுக்குள் ஒத்துழைப்பு
மற்றும் கூட்டு நடவடிக்கை கருத்தைத் திறந்த மனதுடன் வரவேற்றது. பெண்கள் அமைப்பின் சம்மேளனம்
என்ற வகையில், மாதர் சம்மேளனம் பன்முகப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. பல்வேறு
பொருளாதார வர்க்கங்கள், கல்விப் பின்னணி, சமூகக் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வந்த
பெண்கள், சம்மேளனத்தில் உயிரோட்டமான அங்கம் வகித்தனர். இப்பெண்களில் ஒவ்வொருவரும் பலதரப்பட்ட
எதார்த்த உண்மைகள் மற்றும் பிரச்சனைகளைச் சந்திக்க, அவை ஒன்றுதிரட்டப்பட்ட இணைந்த முறையில்
மாதர் சம்மேளனத்தால் எடுக்கப்பட்டன.
முதல் பேராயத்தின் தீர்மானங்கள்
கூட்டாட்சி கட்டமைப்பிலான மாதர் சம்மேளனம், கட்சி சார்பற்ற பெண்கள் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கும் இடமளித்து சம்மேளனத்தைக் குழுப்போக்கு அற்ற முன்னணியாகக் கட்டியமைத்தது. கல்கத்தாவில் நடந்த
சம்மேளனத்தின் தனித்துவம்
மாதர்
சம்மேளத்தின் நடவடிக்கையின் தனித்துவமான அமசம் அதன் பன்முகப் பரிமாண அணுகுறை. அந்த
அணுகுமுறை அனைத்துப் பிரச்சனைகள் மற்றும் பெண்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்
வயது வந்தோர் கல்வியறிவு மையங்கள், சட்ட விழிப்புணர்வு முகாம்கள், தேவையுள்ள பெண்களுக்கு
உற்பத்தி அலகுகள், வேலைவாய்ப்புப் பயிற்சி, வன்முறை மற்றும் சமூக ஒடுக்கு முறையால்
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவி போன்ற ஆக்கபூர்வ வளர்ச்சி செயல்திட்டங்களைச்
சுற்றி விழிப்புணர்வை எழுப்பி பெருந்திரள் பிரச்சாரங்களை இணைத்து நடத்தியது.
மாதர்
சம்மேளன மாநிலக் கிளைகள் உழைக்கும் பெண்களுக்கான விடுதிகளைக் கட்டியது மட்டுமல்ல, பால்வாடிகள்
மற்றும் குழந்தைக் காப்பகங்களையும் நடத்துகின்றன. நம் மாதர் சம்மேளனம் மற்றும் அதன்
பெரும் தலைவர்கள் ஆற்றிய கேந்திரமான பணிகளைப் போற்றி அங்கீகரிக்காவிட்டால், இந்தியப்
பெண்கள் இயக்கம் குறித்த வரலாற்றுப் பதிவு முழுமையற்றதாகவும், காரண காரியத் தொடர்ச்சி
அற்றதாகவும் இருக்கும். 1954ல் சம்மேளனம் முகிழ்த்ததிலிருந்து ஆற்றும் பணிகள் இன்றும்
தொடர்கின்றன. இந்த நாட்டின் பெண்களின் 70 ஆண்டு கால வரலாறு மற்றும் சமாதானம், சமத்துவம்
மற்றும் கண்ணியத்திற்கான அவர்களின் திரட்டி அமைத்த அரசியலின் தொடர்ச்சியே இந்திய மாதர்
தேசியச் சம்மேளனம்.
வரலாற்றாளர்கள்
மற்றும் அறிஞர்கள் சிலர் வரலாற்றைப் பகுதியளவு ஆராய்ந்து இந்நாட்டில் திரட்டப்பட்ட
பெண்கள் இயக்கம் 1970களின் பிற்காலத்தில் தொடங்கப்பட்டது மட்டுமே என்று கருதி வரலாற்றுப்
பிழையை அவர்கள் அறியாமலேயே செய்கின்றனர். முந்தைய பல பத்தாண்டுகள் தேசிய ஆர்வம் மற்றும்
சுதந்திரப் பரபரப்பில் தூண்டப்பட்டு செயல்பட்டதால், பெண்கள் இயக்கம் அதனை அனுபவம் இன்றிச்
சோர்வாகக் கடந்தது என்று கருதிவிட்டனர். இது அரை குறை பார்வை, காலனிய ஆட்சியின் கீழும்
மற்றும் அதற்குப் பிறகும், நிறைவேற்றி முடிக்கப்படாத பாலின நீதி நோக்கத்திலிருந்து
குறிக்கோளை விலக்காது செயல்பட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள் செய்த முக்கிய பங்களிப்புகளுக்குச்
செய்யப்படும் தீமை மற்றும் அவமரியாதை தவிர இது வேறில்லை.
சட்டங்கள் செய்ய வந்தோம்
எண்ணற்ற
வரலாற்று திருப்பங்களை ஏற்படுத்தும் சட்டரீதியான
தலையீடுகள் 50கள் மற்றும் 60களில் தொடங்கி வைக்கப்பட்டன. இக்காலகட்டம் பெண்களுக்கான
முழுமையான சமத்துவக் குடியுரிமைக்கு உதவிடும் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்படக் கண்டது.
இவற்றில் சில சட்டங்கள் அதன் சட்டவரம்பு மற்றும் திறனை விரிவுபடுத்தும் வண்ணம் தொடர்ச்சியாகப்
பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்டன. சட்டம் மற்றும் சமூகச் சீர்திருத்தம்
நிச்சயமாக மாதர் சம்மேளனத்தின் கவனக் குவிப்பு பகுதியானது. பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு
எதிரான இதற்கான போராட்டங்கள், பிரச்சாரங்கள் முதலியவற்றில் மாதர் சம்மேளனம் முன்னணியில்
இடம் பெற்றது.
திருமணம்,
மணவிலக்கு, வரதட்சிணை, வாரிசுரிமை மற்றும் (உடன்கட்டை ஏற்றும்) சதி போன்றவை தொடர்பான
தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தம் ஏற்படுத்தியதில் மாதர் சம்மேளனம் ஆற்றிய பங்கைக்
குறிப்பாகச் சுட்டிக் காட்ட வேண்டும். திருமணம், குடும்பம், வாரிசுரிமை முதலியவற்றை
சமத்துவம் மற்றும் நீதி பற்றிய நவீன கருத்துக்களுடன் பொருந்துமாறு சட்டரீதியாக முறைப்படுத்தவும்
சீர்திருத்தவும் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்றுதான் இந்து குறுங்குறி
மசோதா (ஹிந்து கோட் பில்). அந்த முயற்சி சமூகத்தின் பழமைவாதப் பிரிவுகளின், முக்கியமாக
இந்து மகாசபாவின், கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது என்பதில் வியப்பில்லை. நேரு சமரசத்
திட்டமாக மசோதாவை நான்கு தனிப்பகுதிகளாக்கினார். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாதர்
சம்மேளனம் இதர மதசார்பற்ற பெண்கள் அமைப்புகளுடன் சேர்ந்து மசோதா குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தவும் மக்களின் ஆதரவைத் திரட்டவும் இயக்கத்தைத் தொடங்கியது. இந்தியப் பெண்களைப்
பீடித்த சமூக -பொருளாதாரச் சமத்துவமின்மைப் பிரச்சனையை இம்மசோதா தீர்க்கும் என மாதர்
சம்மேளனம் நம்பியது. மேலும் மக்கள் சட்டத்தை ஏற்கவும், அமலுக்குக் கொண்டுவரவும் சட்ட
சீர்திருத்தத்துடன் இணையாக சமூக இயக்கமும் முன்னெடுப்பது அவசியம் என்பது சம்மேளனத்தின்
கருத்து.
சட்டத்தை
நிறைவேற்றுவது மட்டுமே சமூகத்தில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தப்
போதுமானதில்லை என்பதில் தெளிவாக இருந்த மாதர் சம்மேளனம், இந்த நெடும் நோக்கத்துடன்
மசோதாவுக்காகத் தீவிரப் பிரச்சார இயக்கங்களைத் தொடங்கியது. ஒலிபரப்பு மற்றும் தகவல்
பரிமாற்ற வசதிகள் மிகவும் வரையறுக்கப்பட்டு இருந்த காலத்தில் மிகுந்த மனித உழைப்பும் நேரத்தையும் கோரும் கையெழுத்து
இயக்கங்களை முன்னெடுத்து 45ஆயிரம் மற்றும் 22160 கையெழுத்துகளுடன் இரண்டு மனுக்களை
நாடாளுமன்ற பெட்டிஷன் கமிட்டிக்குச் சமர்ப்பித்தது. மாதர் சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள்
பெட்டிஷன் கமிட்டியையும் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களையும் சந்தித்தனர்.
வரதட்சணைக்கு எதிராக
வரதட்சணையைச் சட்டவிரோதமாக்கும் மசோதாவை வடிவமைப்பதிலும் அதனைச் சட்டமாக நிறைவேற்றவும் ஆற்றிய பங்கு NFIWவின் மற்றொரு வரலாற்றுப் பங்களிப்பாகும். முன்பு துணிச்சலாக மோதி நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்ட சீர்திருத்தங்களை மேலெடுத்துச் சென்ற ரேணு சக்ரவர்த்தி,
நாடாளுமன்ற, மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர்களாகவும் இருந்த நம்முடைய பல தலைவர்கள், பெண்களுக்கு ஆதரவான மசோதாக்களை அறிமுகம் செய்தனர்; அந்த மசோதாக்களின் மீதான தேர்வுக் குழுக்களுக்குத் தலைமை தாங்கி அச்சட்ட ஷரத்துகள் மீது விரிவாக விவாதித்து செழுமைப்படுத்தினர்; மன்றங்களுக்கு வெளியே நாடு முழுவதும் அதற்கு மக்களின் ஆதரவையும் திரட்டினர். இந்து கோடு மசோதா, வரதட்சணை
மாதர்
சம்மேளனம் ஒரு சம்மேளன அமைப்பாக / கம்யூனிஸ்ட், சோஷலிச ஜனநாயக மதசார்பற்ற அமைப்புகளின் மேடையாகத்
தேசிய, பிராந்திய முக்கியத்துவமுடைய பிரச்சனைகளை, தன்னாட்சி மற்றும் பிரச்சனை அடிப்டையில்
அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டு தீர்க்க முயன்றது. அத்துடன், முறைசார்ந்த மற்றும்
முறைசாரா பெண் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் பிரச்சனைகளையும், பெண்கள்
வாழ்வியலைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் தனியாக அல்லது பிற அமைப்புகளுடன்
கூட்டாக எடுத்தது.
சீர்குலைக்கப்படும் சட்டங்கள்
ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் பாஜக அரசு ஒன்றியத்தில் அதிகாரத்திற்கு வந்தது முதல், பெண்கள் மற்றும் பெண்கள் இயக்கத்திற்கு எதிரான சவால்கள் மேலும் சிக்கல் நிறைந்ததாகி உள்ளன. தற்போது பாசிசத் தாக்குதலுடன் ஆணாதிக்கம் அதிகரித்துள்ளது. வயது வித்தியாசம் இன்றி பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆள்வோர் பாதுகாப்புடன் இதற்கு முன் இல்லாத கொடூரத்துடன் அதிகரித்துள்ளன. பெண்களின் பாதுகாப்பு, கௌரவம் மற்றும் சமத்துவத்திற்காக நாம் போராடிச் சாதித்த, பெண்கள் மற்றும் குழந்தையை மையமாகக் கொண்டு வந்த சட்டங்கள் இன்று அர்த்தமில்லாதவைகளாக மாறியுள்ளன. நாடாளுமன்றம் நிறைவேற்றிய
பெண்களுக்கு முன்னுள்ள சவால்கள்
கார்ப்பரேட்களின்
லாப நோக்கத்திற்கு ஆதரவாக வகுக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள், கண்ணியத்துடன் வாழ்வதற்கான
பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றன. பெண்களின் வேலைவாய்ப்பு மேலும் மேலும் அரிதாகிறது,
வேலை கிடைத்தாலும் அது குறைந்த கூலிக்கு அல்லது ஊதியமில்லாத வேலையாகிறது. சமூக அக்கறையில்லாத
புதிய கல்விக் கொள்கையும், கல்விக்கு அரசின் குறைந்த நிதிஉதவியும் பெண்களை இருளில்
தள்ளுகிறது. சிறுபான்மையினரின் கல்வி உதவித் தொகைகளை நிறுத்தும் ஒன்றிய அரசின் முடிவுகள்,
பெண்களுக்கு அனைத்து வகையிலும் அதிகாரமளிக்கும் கதவுகளை இழுத்து மூடுவது என்பதைத் தவிர
வேறில்லை.
வரலாற்றைச்
சிதைத்து, பாடத் திட்டங்களைத் திருத்தி எழுதுவதை விரைந்து பின்பற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின்
செயல், அறிவியலுக்கு விரோதமானது மற்றும் அறிவியல் உணர்வுக்கு எதிரானது. வெறுப்பைப்
பரப்புல், வன்முறை தாக்குதல்கள் மற்றும் வெளிப்படையாகப் பாகுபாடுகளைக் காட்ட அழைப்பு
விடுதல் என்று பெரும்பான்மையின பாசிச அமைப்புகள் பாஜக அரசுகளின் மறைமுக ஆதரவுடன் ஆடும்
வெறியாட்டம், மக்களின் வாழ்விலும் ஒட்டு மொத்தச் சமூகத்திலும் கற்பனை செய்ய முடியாத
பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பெரும்
எண்ணிக்கையிலான பெண்கள் அமைப்புகளையும், பெண்கள் உரிமை குழுக்களையும் ஒன்றிணைக்கவும்
கூட்டாகச் செயல்படச் செய்யவும் இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் ஆற்றிய தளராத தொடர்
பணி இந்தியாவில் பெண்கள் இயக்கத்திற்கு உற்சாக எழுச்சியையும் பல பலன்கள் மற்றும் வெற்றிகளையும்
வழங்கியுள்ளது.
இத்தகைய
சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக நிற்பது தவிர்க்க முடியாத கட்டாயமாகியுள்ளது. அது
பெண்கள் இயக்கத்திற்கு மட்டுமல்ல, மாறாக அனைத்துப் பெருந்திரள் வர்க்க அமைப்புகளுக்கும்,
பொதுவாகக் குடிமைச் சமூகத்திற்கும் நல்லது. ஆணாதிக்கம் மற்றும் பாசிசத்தை வீழ்த்தி
நமது அரசியலமைப்பின் உயிர்ப்பான விழுமியங்கள் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளை உயர்த்திப்
பிடிக்கவும் நாம் ஒன்றாக இருப்பது கட்டாயம்.
அமைப்பை
வலிமைப்படுத்துவோம்!
வலிமையான
அமைப்பினால் மட்டுமே அத்தகைய முன்னெடுப்பை மேற்கொள்ள முடியும். பல்வேறு மாநிலங்களில்
செயல்படும் சம்மேளனத்தின் துணை அமைப்புகளில் நம் அமைப்பிற்கு நெருக்கமான தனிநபர்களையும்,
அமைப்புகளையும் மேலும் மேலும் கொண்டு வந்து இணைப்பதன் மூலம் அவற்றை எல்லாம் வலிமைப்படுத்தி
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை வலிமைபடுத்த நாம் உறுதி ஏற்போம்.
No comments:
Post a Comment