Monday, 8 December 2025

இந்திய அரசியலமைப்புச் சட்டமும் சாதியும்

 


19ம் நூற்றாண்டு வருகையிலிருந்தும், கல்வியும் விழிப்புணர்வும் பரவியதிலிருந்தும்

சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதி கவனக் குவிப்புப் பெற்றது. பெரியார், மகாத்மா
பூலே மற்றும் டாக்டர் அம்பேத்கர் போன்ற மற்றும் பிற சீர்திருத்தவாதிகள் இந்தச் சாதி அநீதி பிரச்சனை மீது கவனக் குவிப்பை ஏற்படுத்தி, சாதியற்ற சமூகத்தைக் கோரி அதற்காகப் பாடுபட்டனர்.

இந்திய மார்க்சியவாதிகளும் கம்யூனிஸ்டுகளும்கூட சமத்துவ அடிப்படையிலான சமூகக் காட்சிப் படிவத்தைச் சித்தரித்து அதில் சாதிக்கு இடமில்லை என்று முன்வைத்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது 2015 புதுச்சேரி கட்சி காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை வடிவமைத்து நிறைவேற்றியது: அந்தத் தீர்மானம், சமத்துவம் மற்றும் சம வாய்ப்பு அடிப்படையிலான சமூகத்தை நிறுவ, சாதிப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டம் இரண்டும் ஒன்றாக இணைந்து செல்ல வேண்டியது குறித்துப் பேசியதுடன், அத்தகைய சமுதாயம் ஒரு சோசலிச அமைப்பில் மட்டுமே சாத்தியம் எனப் பிரகடனம் செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் கூட அத்தகைய சமூகத்தை எண்ணத்தில் கொண்டிருந்தது. 

எனினும் 1949ல் அமைக்கப்பட்ட நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதனைச் சந்தித்தது. எதார்த்தத்தில் அத்தகைய சமூகம் ஒன்று இல்லை. அத்தகைய சமூகத்தை அமைப்பதற்குச் சமூக நீதிக் கருதுகோள் கட்டாயம் என்பதை உணர்ந்தது. இந்திய அரசியலமைப்பை வரைவதும் முக்கியமான நடவடிக்கை என்பதால், எஸ்சி/ எஸ்டி சமூகத்தினருக்கு அதில் இட ஒதுக்கீடு அளிப்பது போன்ற உறுதியான நேர்மறை நடவடிக்கைகளை முன்மொழிந்தது. அதன் பின்னர் இது பிற பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட்டது.

சாதி என்பது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நிலவி வருவது மட்டுமின்றி, மதத்தாலும் நியாயப்படுத்தப்பட்டதால் சாதி, கருத்தியல் மட்டம் என்பதைத் தாண்டி (ஆதிக்கம் முதலிய) கள எதார்த்த சக்தி ஆனதுடன், மனித மனத்தையும் கெட்டியாகப் பற்றிப் பிடித்துள்ளது. இன்று, மேல் சாதியினர் மட்டுமின்றி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற பிற சாதிகளைச் சார்ந்தவர்களும்கூட இந்தச் சாதி ரீதியான சிந்தனைக்குப் பலியாகி வருவதை நாம் காண்கிறோம். எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தப் பிரச்சனையைச் சமாளித்துக் கையாள வேண்டி வந்தது.

சாதாரணமாக சாதி வாதத்தால் நியாயப்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட சாதி என்றழைக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததன் மூலம் இந்த மெரிட் தகுதி மாயை நொறுக்கப்பட்டது; மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கடந்த 75 ஆண்டுகள் அனுபவம் இந்த அம்சத்தை நிரூபிக்கிறது. ஆனால் அது சமூகம் முழுமையாலும்  ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஒரு கருத்து மக்கள் கூட்டத்தைக் கவ்வி பிடிக்கும்போது அது எதார்த்தச் சக்தியாகிறது என்றார்

காரல் மார்க்ஸ்; மக்கள் மனதைப் பிடித்துள்ள இந்தச் சாதிப் பிடிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால்தான், அது ஆதிக்க எதார்த்த சக்தி என்ற நிலையிலிருந்து அகற்றப்படும்; அதன் மூலமே சாதியக் கருத்தியலை எதிர்க்கும் யதார்த்தக் களநிலைகளை ஏற்படுத்த முடியும்.

இட ஒதுக்கீட்டின் மூலம் அதற்குத் தீர்வு காண  முயற்சிக்கப்பட்டது. ஒரு சமூகத்தில் ஒரு தனிநபருக்குக் கண்ணியம் மற்றும் சம வாய்ப்பு இருந்தால் மட்டுமே, மற்றும் அவன் அல்லது அவள் சாதி, மதம், பாலினம், மொழி முதலான அடிப்படைகளில் பாரபட்சம் இல்லாமல் பணியாற்றுவதற்கும் வாழ்வதற்கும் முடிந்தால் மட்டுமே சாதி இல்லாத சமூகம் அமைக்கப்பட முடியும் என்ற உண்மையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உணர்ந்திருந்தது. 

சாதிக் சமூகத்தின் தற்போதைய சவாலும், சாதியற்ற சமூகத்தை எதிர்காலத்தில் நிர்மாணிப்பதும் இந்திய அரசியலமைப்பால் முன்மொழிக்கப்பட்டது. இது நமது அரசியலமைப்பின் சிறப்பு; இதனை நாம், நவம்பர் 26ல் வர இருக்கின்ற அரசியலமைப்புச் சட்ட தினத்தில் வலியுறுத்த வேண்டும்.

இந்த லட்சியத்தை நோக்கி முன்னோக்கிச் செல்ல அறிவியல் பார்வை மிக முக்கியமானது; எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம், (காரண காரிய தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் அறிவான) அறிவியல் பார்வையைப் பரப்பும் பொறுப்பை இந்திய அரசிடம் அளித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்று, கலாச்சாரத் தேசியம் என்ற பெயரில் இந்தப் பொறுப்பு அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த உலகில், தேச மக்கள் மத்தியில் அறிவியல் கண்ணோட்டப் பார்வையைப் பரப்பும் பொறுப்பை அரசிடம் வழங்கிய ஒரே அரசியலமைப்புச் சட்டம் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே.

அதுபோலவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறுவிய அரசு, மதசார்பற்றத் தன்மையுடையதாகவும், எந்தவொரு மதம், பிரிவு அல்லது சாதிக்குச் சொந்தம் உடையது இல்லை என்றவாறும் அமைத்தது. நவம்பர் 26ல் அரசியலமைப்பு தினத்தை நாம் கொண்டாடும்போது இவை நினைவுறுத்தப்பட்டு, பலப்படுத்தப்பட வேண்டும்.

இந்தியா 140 கோடி மக்கள் தொகையுடன் கூடிய ஒரு தனித்துவமான தேசம். இங்கே சாதி ஒரு வித்தியாசமான வினோதப் பிரச்சனை மற்றும் உலகம் முழுதும் பணியாற்றுவதற்காகச் செல்லும் இந்தியர்களுடன் சாதியும் கூட உலகெங்கும் பரவுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் –சாதி அநீதி குறித்தப் புகார்கள் வந்த காரணத்தால்– சாதி பாரபட்சத்திற்கு எதிரான சட்டங்களை இயற்றி உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இதன் விளைவாய் இந்தியச் சமூகம் சாதி முறையை ஒழிக்க தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்ற புரிதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் விரும்பியது இதைத்தான் மற்றும் இந்தியர்கள் நாம் அனைவரும் அந்தத் திசை வழியில் பணியாற்ற வேண்டும்.

துரதிஷ்டவசமாக, பெரும்பான்மையான சாதிகள், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த கேள்விக்கான பதில் இட ஒதுக்கீடு என்று நினைப்பதால், விரிவாகப் பரவியுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் இதற்கு எதிராகத் தடையாக உள்ளது. ஆனால் அது அவ்வாறு அல்ல.  இந்த யதார்த்த உண்மையை அம்பலப்படுத்த இட ஒதுக்கீடுகள் மட்டுமல்ல, வாய்ப்புகளும் கிடைக்கச் செய்ய வேண்டும்: அதுவும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டு வரும்போது மற்றும் தனியார் துறை பிரிவில் இட ஒதுக்கீடுகள் இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். தனியார் மயமாக்கப்படுவதால் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு இடங்கள் இழக்கப்பட்டது எவ்வளவு என்பது குறித்தப் புள்ளி விபர தரவுகளை ஒருவர் தேடினால், அத்தகைய புள்ளி விபரங்களே இல்லை என்பது மட்டுமல்ல; மாறாக அத்தகைய பிரச்சனைகள் மீது எந்தப் போராட்டங்களும்  நடத்தப்படுவதும் இல்லை –சமூக நீதியைப் பேணுவதில் நாம் உண்மையிலேயே இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க நினைத்தால் அத்தகைய போராட்டங்கள் இத்தருணத்தின் தேவையாகும். ‘தனியார்மயத்தைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே’ என்பது நமது முழக்கமாக வேண்டும்!

தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் காரணமாகப் பணியிடங்கள் குறைக்கப்படுகின்றனவா என்பதன் மீது விவாதங்கள் நடைபெறுகின்றன. புதிய தொழில்நுட்பம் காரணமாக ஏற்படுத்தப்படும் புதிய பணிகள், சிறப்புத் திறன்கள் மற்றும் கல்வித் தகுதியைக் கோருகின்றன. புதிய பணிகளுக்குத் தகுதி உடையவராக்க அனைத்து இந்தியர்களுக்கும் பொருத்தமான அத்தகையத் திறன்கள் மற்றும் கல்வியை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி தனியார்மயமாக்கல், பணம் உடையவர்களுக்கு மட்டுமே தேவைகளைப் பூர்த்தி செய்வதால் இதில் உதவிடாது –சமீபத்தில் வருமானம் மற்றும் சொத்தில் சமத்துவமற்ற தன்மை மீது நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அந்த ஏற்றத்தாழ்வு அபாயகரமான அளவை எட்டி உள்ளதாகச் சுட்டிக் காட்டுகிறது.

மேற்கண்ட பின்னணியில், இந்தியாவில் சாதிகள் குறித்தப் பிரச்சனையை இந்திய அரசியலமைப்புச் சட்டம், நடைமுறை சாத்தியமான வகையில் கையாண்டுள்ளது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். 

அத்தகைய பெருமிதம் மிக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நாம் உறுதி ஏற்போம்! மற்றும் சாதியற்றச் சமூகத்தை அமைக்கும் அதன்  விழைவை நனவாக்க நாம் பாடுபடுவோம்!

--நன்றி : நியூ ஏஜ் (நவ.30 –டிச.6)

–தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.

 

 

 

Friday, 28 November 2025

ஏங்கெல்ஸ் – மார்க்சியத் தத்துவத்தை இணைந்து உருவாக்கியவர்

ங்கெல்ஸ் –

மார்க்சியத் தத்துவத்தை

இணைந்து உருவாக்கியவர்

–கிருஷ்ண ஜா

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் இல்லாமல் மார்க்சியம் முழுமை அடைந்திருக்க முடியாது. புருஷிய அரசாட்சி ரைன் மாகாணத்தின் பர்மன் என்ற ஊரில் 1820 நவம்பர் 28ல் பிறந்த ஏங்கெல்ஸ், மார்க்சிடமிருந்து பிரிக்க முடியாதவர். அவரது தந்தை ஜவுளி நூற்பாலை உரிமையாளர். தந்தையின் விருப்பப்படி அவர் தனது கல்வியை விட்டுவிட்டு பர்மனில் வணிகத்தில் ஈடுபடும் கட்டாயத்திற்கு ஆளானபோதும், அவர் நவீன பாட்டாளிகளின் மிகச் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் அறிவாளிகளில் ஒருவரானார். ஏங்கெல்ஸ் குறித்த சிறிய வரலாற்றுக் குறிப்பில் லெனின், “இந்த இரண்டு நண்பர்கள் ஒன்றான காலத்தில் இருந்து, அவர்கள் பொதுவான சமூக நல நோக்கத்திற்கு உழைக்க தங்கள் வாழ்வின் பணியை அர்ப்பணித்தார்கள். பாட்டாளிகளுக்கு ஏங்கெல்ஸ் என்ன செய்தார் என்பதைப் புரிந்து கொள்ள ஒருவர், தங்கள் சமகால தொழிலாளர் வர்க்க இயக்க மேம்பாட்டிற்கு மார்க்சின் போதனைகள் மற்றும் ஆக்கங்கள் குறித்த தெளிவான கருத்தைப் பெற்றிருக்க வேண்டும்” என்று எழுதினார்.

உண்மையில் மார்க்ஸும்  ஏங்கெல்ஸும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன்னோடிகள் –அவர்கள்தான் அந்த வர்க்க இயக்கத்தை, நவீனச் சமூகத்தில் சுரண்டலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தீமைகளிலிருந்து பாட்டாளிகளை விடுவிக்கும் வர்க்கப் போராட்டம் என விளக்கினர். வர்க்கப் போராட்டம், சமூகத்தை மேலும் முன்னெடுத்து நடத்திச் செல்லும் வாழ்வின் ஜீவிதம். ‘ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் ரீதியிலானது’ என்று கூறிய ஏங்கெல்ஸ், எனவே அது நன்கு உணர்வுடையதும் ஒருங்கமைத்துத் திரட்டப்பட்ட ஒன்றுமாகும்; ஏனெனில் அது சுரண்டல் முறைமையையே எதிர்த்து நடத்தப்படுவதாகும். ஒரு வர்க்கம் மற்றதன் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையை முடிவு கட்டுவதுடன் ஒரு மாற்றத்தை இது கொண்டு வருகிறது. மேலும் அது தனி சொத்துரிமைக்கும் அராஜகமான (சட்ட ஒழுங்கற்ற) சமூக உற்பத்திக்கும் முடிவு கட்டுகிறது.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் இந்தக் கருத்துக்கள் மக்கள் தொகையில் பெரும் பகுதியினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவர்கள் சோசலிச நூல்களைப் படைப்பதிலும் ஈடுபட்டனர். சமூக இயக்கங்கள் பரவலாகப் பெருக்கினாலும், அவை அனைத்துமே அறிவியல் ரீதியில் அமைக்கப்பட்டன அல்ல. அவற்றில் பல இயக்கங்களும் சமூகத்தை மாற்றுவதில் முனைந்தன; ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் பூர்ஷ்வா (நடுத்தர வர்க்க முதலாளியியம்) இடையில் நோக்க நலன்களில் முரண்பாடு நிலவும் கள யதார்த்தத்தை ஏற்பதில் அவை தோல்வியடைந்தன.

மேலும், தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியை ஆளும் வர்க்கங்கள் அறியாது உள்ளனர் என்பது அவர்களின் புரிதலாக இருந்ததால், அவர்கள் வன்முறையில் ஈடுபட விரும்பவில்லை. முதலாளிகளின் வளர்ச்சியுடன் தொழிலாளர் வர்க்க வளர்ச்சியைக் கண்டு அவர்கள் திகிலடைந்தனர். இது, தொழில்துறை மேலும் வளர்வதை நிறுத்த வேண்டும் மற்றும் அதன் மூலம் வரலாற்றின் சக்கரங்களும் சுழல்வதில் இருந்து நிறுத்தப்படும் என அவர்களை நம்ப தூண்டியது. இவற்றை விளக்கும்போது லெனின், ஏங்கெல்ஸ் குறித்து எழுதுகையில், ‘மார்க்ஸுடன் சேர்ந்து ஏங்கெல்ஸ், தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே உணர்ந்து கொள்ளவும், அதன் வலிமை குறித்த விழிப்புணர்வு பெறச் செய்யவும் பாடுபட்டார்’ என்று எழுதினார். ஏங்கல்ஸும் மார்க்ஸும் பாட்டாளிகளின் கனவுகளை அறிவியலுடன் நிரூபித்தனர்.

தத்துவ இயலாளர் ஹெகல், தத்துவ உலகில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்த காலமது. நீண்ட காலம் இல்லை என்றாலும், ஏங்கல்சும் கூட அவரைப் பின்பற்றுபவரானார். ஹெகல் அப்போது நிலவிய ஏதேச்சிகார ஆட்சியைப் (autocracy) போற்றுபவராக இருந்தாலும் அவரது போதனைகள் புரட்சிகரமானவை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்பது அவரது கருத்துக்களின் அடிப்படைகளாக இருந்தன. அப்போது சிலர், தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பது என்ற இந்தக் கருத்துக்களை, ஒன்று முடிவுக்கு வந்து மற்றொன்று வருவது என்றும் கூட விளக்கலாம் –அதாவது முடிவில்லாத மாற்றத்தின் முறைமை இது– என்பதாக மறைமுகமாக விளக்கினர். ஹெகல் ஒரு கருத்து முதல்வாதி மற்றும் கருத்தே –மனித மற்றும் சமூக உறவுகள் உட்பட– முழுமையான எதார்த்தத்தின் ஆதார ஊற்று என்று கருதியவர். இந்தக் கருத்து அமைவுகளுக்கும் (ஃபார்முலேஷன்) மற்றும் தனித்த, நிபந்தனையற்ற அறுதி முழு முதல் (அப்சல்யூட்) கருத்தியல் என்பதற்கும் எதிராக மார்க்சுடன் ஏங்கெல்ஸ் எழுந்து நின்றார். அவர்கள் இருவரும் இவ்வுலகின் பௌதீக சக்திகளே இயற்கை உருவாவதற்கு உதவுவதாக நம்பினர்.

இந்த நேரத்தில்தான் ஏங்கெல்ஸ், 1845ல் “இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை” என்ற நூலை எழுதினார். பாட்டாளிகள் தீவிரமான பற்றாக்குறை மற்றும் ஏழ்மையில்

மட்டும் துன்பப்படவில்லை, மாறாக அதற்கும் மேலும் இருக்கிறது என்று முதன் முதலில் அறிவித்தவர் ஏங்கெல்ஸ்தான். ‘அவர்களின் துன்ப துயரங்கள் இந்தப் பாதகமான நிலைமைகளுக்கு எதிராக எழ நிர்பந்திப்பதுடன், முழுமையான விடுதலைக்குப் போராட வருமாறும் அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. முழுமையான விடுதலைக்காக ஆள்வோர்களுக்கு எதிரான கிளர்ச்சி, தொழிலாளர் வர்க்க அரசியல் இயக்கத்தைக் கிளர்ந்தெழச் செய்து, இறுதியாகச் சோஷலிசம் மட்டுமே தீர்வாக முடியும் என அவர்களை உணர்ந்திடச் செய்கிறது’. ஏங்கெல்ஸ் எழுதிய இந்த நூல் குறித்து லெனின், அது, “முதலாளித்துவம் மற்றும் பூர்ஷ்வாக்கள் மீதான கடுமையான கண்டனமும் விமர்சனமும் ஆகும்; மற்றும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய நூல்” என்று கூறினார். “1845க்கு முன்பும் சரி அதற்குப் பிறகும் சரி, இதுபோல் ஈர்க்கக்கூடிய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உண்மையான படப்பிடிப்பு –தொழிலாளி வர்க்கத் துன்ப துயரங்களின் சித்திரம்– தோன்றியதில்லை” என்றும்கூட லெனின் எழுதினார். 

இங்கிலாந்து வந்து சேர்ந்த பிறகு ஏங்கெல்ஸ் சோஷலிசவாதி ஆனார், மான்செஸ்டரில் தொழிலாளர் இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார். இந்நேரத்தில் மார்க்ஸும்கூட சோஷலிஸ்ட் ஆகி இருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து “புனிதக் குடும்பம் அல்லது விமர்சனபூர்வ விமர்சனத்தின் மீதான விமர்சனம்” (அதாவது இளம் ஹெகலியர்களை  விமர்சித்து “The Holy Family, or Critique of Critical Criticism”) என்ற நூலை எழுதினர். அப்புத்தகம் புரட்சிகர பொருள் முதல்வாத சோஷலிசத்தின் அடிப்படைகளைக் கொண்டது.

1845லிருந்து 1847 வரை ஏங்கெல்ஸ், புரூசெல்ஸ் மற்றும் பாரிஸில் இருந்தார். இங்கே அவர்கள் இரகசிய ஜெர்மன் கம்யூனிஸ்ட் லீக் அமைப்புடன் தொடர்பில் இருந்தபோது, சோஷலிசத்தின் முக்கிய கோட்பாடுகள் குறித்து எழுதுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டனர் –அப்போது அவர்கள் அந்த விஷயம் குறித்துதான் தங்கள் ஆய்வை நடத்திக் கொண்டிருந்தனர். இவ்வாறுதான், கம்யூனிசத்தின் கோட்பாடுகளுடன், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ (தி மேனிஃபெஸ்டோ ஆப் கம்யூனிஸ்ட் பார்ட்டி) வந்தது.

மார்க்ஸ் லண்டனில் குடியேறினார்; ஏங்கெல்ஸ் ஓர் எழுத்தர் பணியை மேற்கொண்டு பின்னர் மான்செஸ்டர் வணிக நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இருவருமாக இணைந்து விஞ்ஞான சோசலிசம் மீது தங்கள் ஆய்வு பணியை நடத்தினர். 1870ல் ஏங்கெல்ஸ் லண்டனுக்கு மாறி வரவும், விரைவில் இருவருமாகச் சேர்ந்து இணைந்த அறிவார்ந்த பணிகளில் ஈடுபட்டனர். ஏங்கெல்ஸ் படைப்புக்கள், பெரும்பாலும் சர்ச்சைக்குரிய தர்க்கரீதியான விமர்சனப்பூர்வமானவை: அறிவியல் பிரச்சனைகள் குறித்த அவை, வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்துருவாக்கத்துடன் (conception) எழுதப்பட்டன. 1883 வரை அவர்கள் கடுமையாகப் பணியாற்றியபோது மார்க்ஸ் மரணமடைந்தார்.

அவரது மாபெரும் படைப்பு மூன்று தொகுதிகளைக் கொண்ட ‘மூலதனம்’ (கேப்பிட்டல்) –அவை, பதிப்பாசிரியராக மட்டுமில்லாமல் அதே நேரம் மீண்டும் ஏங்கல்ஸால் திரும்ப எழுதப்பட்டு வெளியிடப்பட்டன. அந்த மாபெரும் படைப்பாக்கத்தில் தனது இறுதி செம்மையாக்கல் சிறு திருத்தப் பணிகளைச் செய்து முழுமையாக்கும் முன் மார்க்ஸ் (மனித குலத்திற்கான தனது சிந்தனைகளை நிறுத்தி) இவ்வுலகை விட்டு மறைந்தார்.

ஏங்கல்ஸால் எழுதப்பட்ட பிறநூல்கள்: 

‘லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” (Ludwig Feuerbach and the End of Classical German Philosophy என்ற நூலின் தமிழாக்கம் பதிப்பு) ஃபாயர்பாக் பொருள்முதல் வாதம் குறித்து வலியுறுத்திய போதும், இயக்கவியல் (டயலெக்டிக்ஸ்) குறித்து வலியுறுத்தவில்லை. (எனவே அது குறித்த  ஏங்கெல்ஸ் விமர்சன நூல் இது).

மேலும் ‘தொடக்க கால கிறிஸ்டியானிட்டி மீது’ என்பது அவர் எழுதிய இன்னொரு நூல். மற்றொரு நூல் ‘டூரிங்குக்கு மறுப்பு’ மார்க்சியத்தின் மூன்று கூறுகளுடன்; வீட்டு வசதி பிரச்சனை மீது இரண்டு பெரும் கட்டுரைகள்; இயற்கையின் இயக்கவியல் முதலான நூல்கள்.  ஏங்கெல்ஸ் இயற்கை விஞ்ஞானம் மற்றும் இராணுவ விவகாரங்கள் மீது சிறப்பு நிபுணத்துவம் கொண்டிருந்தார். ஏங்கெல்ஸ் இரண்டாவது (கம்யூனிச) சர்வதேச அகிலம் அமைப்பை நிறுவியவரும் ஆவார்.

மார்க்சியத்தின் இணை நிறுவனரான பிரெட்ரிக் எங்கெல்ஸ் 1895 ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் இயற்கை எய்தினார். 

காரல் மார்க்சின் பெருங்கொடையை நமக்கு முழுமையாக்கித் தந்த மார்க்ஸின் இணைபிரியா நண்பர் பிரெட்ரிக் எங்கெல்ஸ் பிறந்தநாளில் அவர் புகழ் பாடுவோம்! 

–நன்றி : நியூ ஏஜ் (நவ. 23 –29)

–தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்

 

    

.     

 

Tuesday, 28 October 2025

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு --அதன் கடந்த காலத்தை அம்பலப்படுத்தும் தருணம்

 

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு

–சந்தேகத்திற்குரிய அதன் கடந்த காலத்தை
அம்பலப்படுத்தும் தருணம்

P சுதீர்

–நன்றி : இந்திய பிரஸ் ஏஜென்சி சேவை (IPA Service)

ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்ட நூற்றாண்டைப் பெருமையுடன் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் பெரும் முயற்சிகளின் மத்தியில், திடுக்கிடச் செய்யும் ஒரு காட்சியால் தேசம் அதிர்ச்சி அடைந்தது. உச்சநீதிமன்ற பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அவர்களை நோக்கி காலணியை வீசினார். ஒரு மனுவைத் தள்ளுபடி செய்யும்போது நீதிபதி கவாய் இந்து மதம் பற்றி இழிவாக விமர்சனம் செய்தார் என்பது வழக்கறிஞரின் புகார்.

எனினும், முக்கிய செய்தி ஊடகங்கள் இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை முக்கியமற்ற அற்ப நிகழ்வாக்க எந்த எல்லைக்கும் சென்று நிறுவ முயன்றன. ‘காலணியை வீசவில்லை, அது வெறும் பேப்பர் கட்டுஎன கதைத்துக் குழப்ப முயன்றன – ஊடகங்களின் வழக்கம் அதுதானே. மற்றவர்கள், கிஷோர் நடவடிக்கையை நியாயப்படுத்த முயன்றனர்: ‘மத உணர்வுகள் காயப்படுத்தப் பட்ட‘தன் மீது எழுந்த மனவருத்தத்தின் வெளிப்பாடு என அதனை விவரித்தனர் –இப்போது அது ஒரு பிரபலமான சொல்லாடல், சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க ஒரு சாக்கு!

இந்த அப்பட்டமான கடும் நிகழ்வுப் போக்கை, ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை அடையாளப்படுத்த கொட்டி முழங்கி பெரிதுபடுத்தப் படும் சூழலுடன் துல்லியமாகக் குறிப்பிட்டுத் தொடர்புபடுத்துவது கடினம். எனினும் நமது கவனத்தில் இருந்து ஒன்று தப்ப முடியாது –அது, இந்த அருவருக்கத்தக்க நிகழ்வை அடையாளப்படுத்தும் வெறுப்பு மற்றும் பழிவாங்கல் உணர்வும் நிறைந்த சூழல் இதுபோன்ற இணையான நிகழ்வுகள் நமது தேச அரசியல் வாழ்வின் முக்கிய கட்டங்களில் பல உண்டு. அப்போதெல்லாம் அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு கோலோச்சிய சூழலைக் காணலாம். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் படுகொலை.

அந்தக் கொடூரமான செயலை நோக்கி கட்டி எழுப்பப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஈடுபாட்டைக் குறித்த வலுவான சந்தர்ப்பச் சாட்சியங்கள் இருந்தன; என்றபோதும், கறாரான நேரடி சாட்சியம் இன்மை, எம்எஸ் கோல்வால்கர் போன்ற பல முக்கிய ஆர்எஸ்எஸ்

செயல்பாட்டாளர்கள் (படுகொலையில்) அவர்களின் தனிப்பட்ட பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட ஏதுவாயிற்று. கோல்வால்கருக்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் எழுதிய கடிதம், “இந்து மகாசபாவுடன் சேர்ந்து ஆர்எஸ்எஸ் பிரச்சாரம், மகாத்மா கொல்லப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியதுஎனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பை அதன் ‘மேன்மை பெருமைக்காக வானளாவ மக்கள் புகழ அரசு எடுக்கும் முயற்சிகளே, உண்மையில், அதன் சந்தேகத்திற்குரிய கடந்த காலம் குறித்தக் கவனக் குவிப்புடன் பெருமளவில் விவாதங்கள்/ உரையாடல்கள் நடத்த அழைப்பு விடுப்பதாக உள்ளது.

பலருக்கும் இந்தக் கொண்டாட்டம் உண்மையில் அந்த அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது; சவார்க்கர் இந்துத்துவா என்று வரையறுத்ததை, நடைமுறையில் கொண்டு வர ஆர்எஸ்எஸ் அமைப்பின் விஷக் கருத்தியல் வேர்களையும் மற்றும் அதன் அமைப்பியல் முறைகளையும் ஆய்வு செய்வதற்கான தருணம் இது. 

இந்துத்துவாவின் சாராம்சங்கள் என்ற தனது நூலின் மூலம் இந்தக் கருத்தியலுக்கான அடிப்படைகளைச் சவார்க்கர் ஏற்படுத்திய போதும், ஆர்எஸ்எஸ் அமைப்புதான், சவார்க்கரால் ஆதரிக்கப்பட்ட ஹிந்து ராஷ்ட்டிரா அமைப்பதை நோக்கிய நடவடிக்கைகளையும், அமைப்பு

ரீதியான வலிமையையும் வழங்கியது. சவார்க்கர் வேறுபட்டதான ஒரு கருத்தியலை, அதாவது அது இந்து சமய நெறிகளைக் குறித்ததன்று; மாறாக, , அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பச்சையான அரசியல் செயல் திட்டம் என்ற கருத்தியல் அடிப்படையிலானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சாவர்க்கர் தனது வார்த்தைகளில், ‘இந்து சமயநெறி கருத்தியல் மற்றும் இந்துத்துவா இடையே குழப்பிக் கொள்வது, இந்துக்களை ஒற்றுமைபடுத்துவதில் ஓர் இடையூறு ஆகிவிடும் –ஏனெனில் சாதிகளால் கட்டமைக்கப்பட்டு செலுத்தப்படும் இந்து சமூகத்தின் (கீழ், மேல் ஏற்றத்தாழ்வான) படிநிலை தன்மை அப்படிப்பட்டது என்று எழுதினார். (சுருக்கமாக, பொதுமக்களின் ‘இந்து சமயநெறி நம்பிக்கை வேறு, ‘இந்துத்துவா வேறு. அது இறை நம்பிக்கை சார்ந்தது – இது அரசியல் நோக்கமுடையது).

எனினும் கடந்த பல ஆண்டுகளில், ஆர்எஸ்எஸ் அமைப்பால் எழுப்பப்படும் கோரிக்கைகள் மற்றும் முழக்கங்களில் இருந்துகூட, இந்துத்துவா நடைமுறைக்குப் பிராமணியம் என்பதே உள்ளார்ந்த சமூகப் பார்வை என்பது தெளிவாகிறது. உதாரணத்திற்கு, ஆர்எஸ்எஸ் பத்திரிக்கை ஆர்கனைசர், தேச விடுதலைக்கு முந்தைய நாளில் வெளியான 1947 ஆகஸ்ட் 14 தேதியிட்ட இதழிலேயே, ‘பன்முகக் கூட்டு தேசம் (composite nation) என்ற கோட்பாட்டை முற்றாக நிராகரித்தது: (‘Whither–‘எந்த இடத்திற்கு, ஏன், எதற்காக, எந்த இலக்கை நோக்கி?’--  என்ற தலைப்பின் கீழ் அமைந்த அதன் தலையங்கத்தில்) “நாம் இனியும் தேசிய அடையாளம் என்ற தவறான கற்பிதங்களால் செல்வாக்கு செலுத்தப்பட அனுமதியோம். பெரும்பான்மையான மனரீதியான குழப்பங்களும், தற்போதைய மற்றும் எதிர்காலச் சங்கடங்களையும், சாதாரண உண்மையைத் தயாராக அங்கீகரிப்பதன் மூலம், நீக்க முடியும்; (அந்த உண்மை,) இந்துஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே தேசத்தை – இந்துக்களால், இந்து மரபுகள், கலாச்சாரம், கருத்துக்கள் மற்றும் விழைவுகள் மீது கட்டப்பட்ட அத்தகைய தேசத்தையும்தேசியக் கட்டமைப்பையும் பாதுகாப்பான மற்றும் உறுதியான அடிப்படையில் கட்ட முடியும்

அதே இதழில் ஆர்கனைசர், தேசியக் கொடியைத் தொடர்ந்து இழிவுபடுத்தி கடுமையாகச் சாடியது: “விதிவசத்தால் அதிகாரத்தில் வந்தமர்ந்தவர்கள், நம் கையில் மூவர்ணக் கொடியைக்

கொடுத்து இருக்கலாம்; ஆனால் ஒருபோதும் அதை மதிக்கவும் முடியாது இந்துக்களால் சொந்தமாக ஏற்கவும் முடியாது.” ஆர்எஸ்எஸ் அதே தொனியில் தேசிய கீதத்தையும் எதிர்த்து, பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலின் ஒரு பகுதியான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது –நிச்சயமாக அந்தப் பாடல், சந்தேகத்திற்கு இடமின்றி, வகுப்புவாதச் சாயலை உடையது மற்றும் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் கேலி செய்து கண்டனம் தெரிவிக்கிறது.

இது ஒரு தற்செயல் உடன் நிகழ்வு அல்ல. காலனிய அடிமை தளையிலிருந்து தேசத்தை விடுவிக்கும் பொதுப் போராட்டத்தில் இருந்து அவர்கள் ஒதுங்கி நின்றது மட்டுமல்ல; மாறாக, “நமது முதன்மையான அர்ப்பணிப்பு இந்துக்கள் பாலானதுஎன்று கூறும் அளவு செல்வதை –சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்தேதனது மரபிலேயே சுமந்து வருகிறது. எனவே பிரிட்டிஷ்க்கு எதிராக ஒன்றுபடுவதை விடநாம் இந்துக்களை ஒன்றுபடுத்த வேண்டும்; அவர்களை இராணுவ மயமாக்க வேண்டும் என்றது.

    ஆர்எஸ்எஸின் இந்த அதே பல்லவி, ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட சமயத்தில் தொடர்ந்தது: அவர்கள் அதை இந்தியத் தன்மையற்றது என வெளிப்படையாகக் கண்டித்தனர். 1949 நவம்பர் 30 தேதியிட்ட ஆர்கனைசர் இதழ் தனது தலையங்கத்தின் மூலம் பழங்கால மனுஸ்மிருதியைச் சட்டபூர்வமாக அரசியலமைப்பு ஆவணமாக ஏற்கக் கோரியது.  அந்தத் தலையங்கத்தில், “ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டத்தில், பண்டைய பாரதத்தின் தனித்துவமான அரசியலமைப்பு வளர்ச்சி உருவானது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஸ்பார்டாவிலும் ஏதென்ஸிலும் சட்டம் எழுதிய அறிஞர்களாக கருதப்படும் ஸ்பார்டாவின் லைகுர்கஸ் / பெர்சியாவின் சொலோன் காலத்திற்கு வெகுகாலம் முன்பே மனுவின் சட்டங்கள் எழுதப்- பட்டன. இந்த நாள் வரை, மனுஸ்மிருதியில் பொறிக்கப்பட்ட அவரது சட்டங்கள் உலகத்தால் உற்சாகமாகப் பாராட்டுப்பட்டுத் தன்னியல்பாக அதற்குப் பணியவும், உடன்படவும் தூண்டுகிறது. ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டப் பண்டிதர்களுக்கு அது ஒன்றும் இல்லாதது எனப்  பொருள்படுகிறது.” 

அரசியலமைப்புச் சட்டம் குறித்து கோல்வால்கர் 

கோல்வால்கரும் அரசியலமைப்பை முழுவதும் மறுத்து உறுதிபடக் கூறினார், “நமது அரசியலமைப்பும் கூட, மேற்கத்திய நாடுகளின் பல்வேறு அரசியலமைப்புச் சட்டங்களில்

இருந்து பல்வேறு ஷரத்துக்களை எடுத்து ஒன்றாக்கிய பல்வேறுபட்ட கூறுகளால் ஒட்டுப் போட்ட கலவையாக, சிக்கல் நிறைந்ததாக உள்ளது.  நமக்குச் சொந்தமானது என்று அழைக்கத்தக்க எதுவும் முற்றிலும் அதில் இல்லை. அதன் வழிகாட்டுநெறி கோட்பாடுகளில் நமது தேசிய லட்சிய நோக்கம் என்ன? மற்றும் நமது வாழ்வில் முக்கிய சாரம் என்ன என்பதன் மீது ஏதாவது ஒரு வார்த்தை குறிப்பு உள்ளதா?”.

ஒரு மக்கள், ஒரு தேசம் என்ற கோட்பாட்டைத் தன்னிச்சையாக மூச்சு முட்டும் சட்டையில் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட இதை, ‘இந்தி, இந்து, இந்துஸ்தான் என்று உடைத்த முழக்கங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தியல் உரையாடல்களில் –முஸ்லிம்கள், கிறிஸ்த்துவர்கள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அதன் தவிர்க்க முடியாத விருப்பத்துடன் கூடியதாகசெல்வாக்குச் செலுத்துகிறது.

எனவே, ஆர்எஸ்எஸ் அடித்தளக் கோட்பாட்டின் அடிப்படையில், எந்தவித நெருடலும் இன்றி இரட்டை விதமாகப் பேசுவத்தைப்  பழகிப் பயின்ற ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர், நாட்டின் பிரதமர் பதவியைப் பிடித்தமரும் வரை இரட்டை விதமாகவே பேசுவார்.

அந்த அடையாளத்தை மறைக்கும் எந்த நிர்பந்தத்தையும் அவர் ஒருபோதும் உணர்வதில்லை; ஆனால் ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின்பால் பிறப்பிலேயே இருக்கும் வெறுப்பு இருந்த போதும், அவரது அரசு அரசியலமைப்புச் சட்டத்தை ஒன்றுமில்லாத வெற்றுக் கூடாக்கவும்; மேலும் அதைக் குறுகிய, குழுவாத, பாசிச, இந்து ராஷ்ட்டிரா தத்துவத்தால் மாற்றி அமைக்க- வும் உள்ளுக்குள்ளே இருந்து முயற்சி செய்யும். இதற்கு மத்தியில் அவ்வப்போது அரசியலமைப்புச் சட்டத்தை வணங்குவது, அந்த நேரத்தால் ஏற்படும் வெறும் நிர்ப்பந்தம் மட்டுமே –அதிலிருந்தும் இறுதியில் தகுந்த வாய்ப்பான நேரத்தில் விடுபடும்.

எவ்வாறாயினும், இந்த இரண்டு ஷூக்களை இரண்டு கால்களில் அணிவது, சில நேரங்களில் சமாளித்துப் பேலன்ஸ் செய்வதில் கடுமையான செயலாகிவிடும். எனவே ஆர்எஸ்எஸ் அமைப்பைப் புகழ்வதில் காட்டப்படும் கூடுதலான உற்சாகம், அதன் சந்தேகத்திற்குரிய சுயம்சேவக் சங்கின் கோரமான கடந்த கால நூறாண்டின் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் முரண்படுகின்றன.

நீதிபதி கவாய் மீதான வழக்கறிஞரின் தாக்குதல் மீது பிரதமரின் தாமதமான மென்மையான விமர்சனமும்; காலணி வீச்சு சம்பவத்தால் பதற்றம் அடையாது அதனைக் கண்ணியமாகக் கையாண்ட தலைமை நீதிபதியின் நிதான நிலைப்பாட்டிற்காக அவரைப் புகழ்வதும் ஒருபுறம் இருந்த போதும், வலதுசாரி சமூக ஊடகப் படைவீரர்கள் நீதிபதிக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் அவர் மீது பழிவாங்கல்களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

சங்கி படை வீரர்களுக்கு, குறிப்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் மனுவாதி ஆதர்ச உற்சாகம் காரணமாக, தலைமை நீதிபதியின் தலித் அடையாளம் மற்றும் புத்தவியல் சார்ந்த நம்பிக்கை அவருக்கு எதிரான இந்த விஷத்தைக் கக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

எனவே ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு, சந்தேகத்திற்குரிய அவர்களின் கடந்த காலத்தை அம்பலப்படுத்தும் வாய்ப்பை நமக்கு வழங்கி உள்ளது: மேலும் சுதந்திரம், ஜனநாயகம் மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்குத் தேசத்தின் பற்றுறுத்தியை உள்ளடக்கிய நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளின் புகழ் கெடுத்துக் களங்கப்படுத்த அரசின் இழிதகவான முயற்சிகளை அம்பலப்படுத்தும் வாய்ப்பை ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நமக்கு வழங்கியுள்ளது.

 

: நியூ ஏஜ் (அக். 26 –நவ.1)

தமிழில் : நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்

 


Sunday, 26 October 2025

நியூ ஏஜ் தலையங்கம் -- சுயமரியாதை இயக்கத்திற்கு இது நூற்றாண்டு


 
நியூ ஏஜ் தலையங்கம் (அக். 26 –நவ. 1)

சுயமரியாதை இயக்கத்திற்கு

இது நூற்றாண்டு

வர்க்கங்களால் ஆன சமூகத்தில் ஒரு வர்க்கம், அடியாழத்தில் வாழும் மற்றொன்றின் மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். வழிகாட்டும் விளக்கைச் சுமப்பவர்கள் அவர்கள், ஆனால் சுமக்கும் அந்த ஜ்வாலை பல நேரம் அவர்களையே எரிக்கும். பாதிக்கப்- பட்டவர்கள் கிளர்ந்து எழுந்து எதிர்க்கத் துணியும்போது, தன்னலவாதிகள் வன்முறையைக் கையில் எடுப்பர். நிலப்பிரபுக்கள் அல்லது முதலாளிகள் யாருக்கு எதிரான போராட்டம் எனினும், அந்த வன்முறை சுரண்டப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தும் அச்சுறுத்தலாக மாறும். –‘இல்லாதஅவர்கள், உழன்று உழைத்து உருக்குலைந்து ‘இருப்பவர்க்கு வளங்களை வாரிக் குவித்தவர்கள். எனினும் எந்தக் குற்றமும் இழைக்காத போதும்கூட அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அது நமது ஜனநாயகக் குணப் பண்பிற்கு ஓர் அச்சுறுத்தல்; சமூகம் முழுமையும் ஒருங்கிணைக்கப் போராட முயற்சிக்கும்போதே, மக்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையை அது பிளவுபடுத்தும்.

எனினும், சமூக பொருளாதார இல்லாமையின் கீழ் வாழும் மக்களுக்கு அது தொடர்ச்சியாகத் தீங்கிழைக்கும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண பல்வேறு பெரும் ஆளுமைகள் மற்றும் இயக்கங்கள், சமூகத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதியளிக்கும் நியாயமான முறைமையைத் தேடி, ஈடுபட்டு வருகிறார்கள். அத்தகைய இயக்கங்களில் ஒன்றுதான் சுயமரியாதை இயக்கம். இந்த ஆண்டு அந்த இயக்கம் நூற்றாண்டை நிறைவு செய்கிறது. சுயமரியாதை இயக்கமும் அதன் இலட்சிய நோக்கங்களும் இளம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர் திறளை ஈர்த்து, செல்வாக்கு செலுத்தி, இறுதியில் சோசலிசம் நோக்கி நகர்த்தியது.

உண்மையில் காலனிய ஆட்சியின் இறுதி 25 ஆண்டுகள் தமிழ்நாட்டில், (பெரியார் தலைமையிலான திராவிட இயக்கத்திற்கு முன்னோடியான) சுயமரியாதை இயக்கம் மற்றும் கம்யூனிஸ இயக்கம் என இரு இயக்கங்கள் மலரக் கண்டது.

மெட்ராஸ் மாகாணத்தில் ஈ வே ராமசாமி பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்திற்கு, முன்னோடி கம்யூனிஸ்டும், சமூக சீர்திருத்தவாதியுமான சிந்தனை சிற்பி எம் சிங்காரவேலர் முக்கியமான கூட்டாளி, 1920கள் மற்றும் 1930களில் அவர்களின் நெருங்கிய நட்பு, சுயமரியாதை இயக்கத்திற்குச் சோசலிச விஞ்ஞான பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை  உட்பகுத்தியது.

1920களில் காங்கிரஸ் கட்சிக்குள் சிங்காரவேலரும் பெரியாரும் நெருங்கிய கூட்டாளிகள். சோசலிசத் தத்துவக் கருத்துகளைப் பெரியார் ஏற்றுத் தழுவியதில் சிங்காரவேலர் முக்கிய செல்வாக்கைச் செலுத்தினார்; அவர் 1923 மே முதல் நாள் இந்துஸ்தான் லேபர் அண்ட் கிசான் பார்ட்டி (தொழிலாளர் விவசாயிகள் கட்சி)யை மெட்ராஸில் நிறுவியவர்.  சிங்காரவேலர், தந்தை பெரியாரின் குடியரசு தமிழ் வார இதழில் சமூகச் சீர்திருத்தம், விஞ்ஞானம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் சோசலிசம் குறித்த தலைப்புகளில் கட்டுரைகளை எழுதுவது வழக்கம்

1932ல் தந்தை பெரியாரின் சோவியத் யூனியன் விஜயத்திற்குப் பிறகு அவர், சிங்காரவேலர் மற்றும் பிற சுயமரியாதை செயல்பாட்டாளர்களுடன் ஈரோட்டில் ஒரு கூட்டத்தை

கூட்டினார். அவர்கள் அனைவரும் இணைந்து “ஈரோட்டுத் திட்டம் வகுத்து, இயக்கத்திற்குச் சோஷலிசக் கண்ணோட்டத்தை வழங்க ‘தென்னிந்திய சமதர்மக் (சோசலிஸ்ட்) கட்சி அமைத்தனர்  –அக்கட்சி சிறிது காலமே செயல்பட்டது. அதே ஆண்டு, சட்ட மறுப்பு இயக்கத்தில் இணைந்த சுயமரியாதை இயக்கச் செயல்பாட்டாளர்- கள் பகத்சிங்கின் நெருங்கிய தோழரான பட்டுக்கேஷ்வர் தத் செல்வாக்குக்கு ஆட்பட்டனர். உண்மையான விடுதலைக்கு இட்டுச் செல்ல சோஷலிசம் ஒன்றே வழி என்ற உணர்வை ஜீவானந்தம் மற்றும் பலரிடம் அவர் ஆழப் பதிய வைத்தார். 

அர்ப்பணிப்புள்ள அறிவியல் ஆதரவாளரான சிங்காரவேலர் இயக்கத்திற்கு விஞ்ஞானபூர்வ மார்க்சிய வரையறையை அறிமுகம் செய்தார். அவரது அணுகுமுறை, வெறுமே சடங்குகளைக் கேள்வி கேட்பதற்கு அப்பால் சென்று, சுரண்டல் மற்றும் அநீதியின் (அடிப்படைக் காரணமான) பொருளாதார வேர்களை நாடிச் சென்று தீர்ப்பதாக இருந்தது. இந்தக் காலத்தை ஒட்டிதான் சுயமரியாதை இயக்க செயல்பாட்டாளர்கள் மத்தியிலும் தந்தை பெரியார் ஈவேரா அவர்களிடத்தும் --குறிப்பாக அவரது சோவியத் யூனியன் பயணத்திற்குப் பிறகு அதுவரை-- சீர்திருத்த இயக்கமாக மட்டுமே இருந்த சுயமரியாதை இயக்கத்தின் தன்மையை மாற்ற வேண்டும் என்ற தெளிவான விழைவு இருந்தது. (பின்னரே அரசியல் லட்சிய நோக்கங்கள் அதில் சேர்க்கப்பட்டன) 

அப்பொழுது சிங்காரவேலர் மேற்பார்வையின் கீழ் புதிய செயல் திட்டம் வகுக்கப்பட்டது. பெரியாரின் இடமான ஈரோட்டில் கூட்டம் நடத்தப்பட்டு ‘தென்னிந்தியச் சமதர்மக் கட்சி’ என்ற புதிய கட்சி அமைக்கப்பட்டது. எனினும் அடிப்படையில் அது பழைய இயக்கமாகவே இருந்தது. ப. ஜீவானந்தம் கட்சியின் செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

காந்திய கருத்துக்களில் தன்னை நிலைநிறுத்தி தனது அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் ஜீவானந்தம். வைக்கம் மகாதேவர் ஆலயத்திற்குச் செல்லும் சாலையில் தலித்துகள் நடப்பதற்கு இருந்த தடையை எதிர்த்து, உயர்ஜாதி இந்துக்களுக்கு எதிராக 1924ல் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகத்தில் ஜீவா கலந்து கொண்டார். சுசீந்திரம் ஆலயத்திற்குள் தலித்கள் நுழைவைக் கோரி நடைபெற்ற அதுபோன்றதொரு கண்டனப் போராட்டத்தில், அவர் கலந்து கொண்டார். வவேசு அய்யர் நடத்திய சேரன்மாதேவி ஆசிரமத்தில் தலித்கள் மற்றும் உயர் ஜாதி ஹிந்து மாணவர்களுக்குத் தனித்தனி ஹால்களில் உணவு  பரிமாறப்பட்டதைக் கண்டார். இந்தச் சாதிப் பாகுபாட்டு நடைமுறையைப் பெரியார் எதிர்த்ததை ஆதரித்து அவர் ஆசிரமத்தைவிட்டு வெளியேறினார்.

பின்னர் காரைக்குடி அருகே சிறுவயலில் அருட்கொடையாளர் ஒருவர் நிதியளிக்க நடந்தப்பட்டு வந்த ஆசிரமத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். ஆசிரம வாழ்க்கை ஏராளமான புத்தகங்களைப் படிக்க அவருக்கு வாய்ப்பை வழங்கியது. இந்த அவசரமத்தில் அவர் காந்தியைச் சந்திக்கும் பேறு பெற்றார். காந்திய முறைகளுடன் உடன்படாது ஜீவா அது குறித்துக் காந்திக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

காந்தி மெட்ராஸ் வந்தபோது அவர் வசம் இந்த கடிதம் இருந்தது, அவர் ஜீவாவைச் சந்திக்க விரும்பினார். (ராஜாஜி) ராஜகோபாலச்சாரியார் காந்தியிடம், ‘நீங்கள் பெயரைக் கூறுங்கள்; அந்தக் குறிப்பிட்ட நபரை இங்கே அழைக்க முடியும் என்றார். காந்தி கூறினார், ‘அவரை இங்கே அழைப்பதில் எனக்கு விருப்பமில்லை; எந்த ஆசிரமத்தில் ஜீவா வசிக்கிறாரோ, அந்த ஆசிரமத்திற்குச் சென்று அவரைச் சந்திக்கவே விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார். காந்தி சிறுவயல் ஆசிரமத்திற்குச் சென்றபோது, தன் முன் நின்ற 25வயது மதிக்கத்தக்க இளைஞர் ஜீவாவிடம் நீங்கள்தானே ‘அந்தக் கடிதம்எழுதியவர் என்று கேட்டார் –ஜீவா ஆம் என்று பதில் அளித்தார்.

(‘ஆசிரமம் நடத்துகிறீர்களே, உங்களுக்கு என்ன சொத்துஎன காந்தி வினவ, “இந்தத் தேசம்தான் எனது சொத்துஎன்றார் ஜீவா. அதை விரைவாக மறுத்த காந்தி, “இல்லை, இல்லை, நீங்கள்தான் இந்தத் தேசத்தின் சொத்துஎன்று கூறிச் சென்றது நம் நெஞ்சில் நிறைந்த வரலாறு அல்லவா! –மொழிபெயர்ப்பாளர் கூடுதல் தகவல் இணைப்பு)

பின்னர் மெட்ராஸ் மாகாணக் காங்கிரஸ் சோசலிசக் கட்சி 1937ல் அமைக்கப்பட்டபோது ஜீவானந்தம் அதன் முதல் செயலாளர் ஆனார். பிறகு இரண்டு ஆண்டுகளில் இயக்கத்தின் மற்றொரு மூத்த செயல் வீரரான  பி ராமமூர்த்தியுடன்,  ஜீவா  இந்தியக்  கம்யூனிஸ்ட்  கட்சியில்

இணைந்தார். சிபிஐ-யில் தன்னை முதல் உறுப்பினராகத் தமிழ்நாட்டில் இணைத்துக் கொள்வதற்கு முன், ஜீவானந்தம் இந்த முந்தைய இரு இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றார். அவரது தேசப்பற்று அவரைத் தேசிய இயக்கத்தில் கொண்டு சேர்த்தது;
தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் பால் அவரது வெறுப்பு, அவரைச் சுயமரியாதை இயக்கத்தை ஆதரிப்பவர் ஆக்கியது.

சிபிஐயில் இணைந்த பிறகு ஜீவானந்தமும் ராமமூர்த்தியும் மார்க்சியப் பாதையில் ரிக்க்ஷா இழுப்பவர்களையும் ஆலைத் தொழிலாளர்களையும் அமைப்பாகத் திரட்டினார்கள். இதில், எம் ஆர் வெங்கட்ராமன் மற்றும் பி சீனிவாச ராவ் போன்ற தலைவர்கள் உதவினர். மார்க்சிய அடிப்படையில் வலிமையான தொழிலாளர் இயக்கத்தைக் கட்டும் முயற்சிகளில் ஜீவா முன்னணியில் நின்றார். இந்தப் பொறுப்பை முழுமையாக்குவதில் அவரது பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் அவருக்கு உதவின. ஆனால் இந்தத் தலைவர்கள் போலீஸ் அடக்கு முறையில் துன்பப்பட்டார்கள் மற்றும் பலமுறை சிறை சென்றார்கள். ஜீவா பதற்றமான இடங்களுக்கும் நேரில் சென்று தொழிலாளர்களின் போராட்ட உணர்வுகளைத் துடிப்புடன் வளர்த்தார். ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளையும் தஞ்சாவூர் மற்றும் பிற மாவட்டங்களில் அவர்கள் திரட்டினர். ஆற்றல் மிக்க தங்கள் உரைகளால் ஜீவானந்தமும் ராமமூர்த்தியும் ஆயிரக்கணக்கான மக்களை ஊக்குவித்தனர் .

(அத்தகைய தலைவர்கள் பாடுபட்டு வளர்த்த) நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் விழுமியங்களை உயர்த்தி பிடிப்போம்!

தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ கடலூர்

பின்குறிப்பு :

1925ஆம் ஆண்டு நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு காங்கிரசின் 31வது மாநில மாநாடு. அந்த மாநாட்டில் பெரியார், ‘பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதார் மூன்று பிரிவினருக்கும் ராஜ்ஜிய சபை, பொது ஸ்தாபனங்களில் அவரவர் சமூக மக்கள் தொகை விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை கோரி’ கொண்டுவந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. பெரியார் மாநாட்டைவிட்டு வெளியேறினார். சிலர் இந்த நாளையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்க நாளாகக் கருதுவதும் உண்டு.

ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் துவக்க விழாவோ, பொதுக்கூட்டமோ நடக்கவில்லை. இந்த இயக்கம் தோன்றியது குறித்து, 1937ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி குடிஅரசு இதழில் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் பெரியார் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் “சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் 1925ல் என்னால் துவங்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால், அந்த இயக்கத்தின் வரலாற்றை அவர் அந்தக் கட்டுரையில் எழுதவில்லை. ஆகவே இந்த இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக ஒரு தினத்தைக் குறிப்பிட முடியாது.

பெரியாரின் குடிஅரசு இதழின் முதல் படியை 1925 மே 2-ஆம் நாள் சனிக்கிழமை அன்று திருப்பாதிரிப்புலியூர் சைவத் திருமடத்தின் தலைவர் தவத்திரு ஞானியார் அடிகள் வெளியிட்டார். தனக்கென ஓர் இதழாகப் ‘‘பெரியார் குடிஅரசு இதழைத் துவங்கிய காலகட்டத்தையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமாகக் கொள்ளலாம்" என்கிறார் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஆ. திருநீலகண்டன். 

எனவே இதையெல்லாம் மனதில் கொண்டு 2025ம் ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவாகக் கொண்டாடப்படுகிறது.

                                                                                            (இணையத்தில் திரட்டியது)