பெண்கள் இடஒதுக்கீடு மசோதா – ஒரு வரலாற்றுப் பார்வை
--ஷியாமாஸ்ரீ தாஸ்
2023
செப்டம்பர் 19ல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடிய முதன் முதலான அமர்வில், “தி
நாரிசக்தி வந்தன் அதினியம்” (வணக்கத்திற்குரிய
பெண் சக்தி சட்ட) மசோதாவை அறிமுகப்படுத்திய பிரதமர் ‘புனிதமானதும்
மற்றும் தவிர்க்க முடியாததுமான குறிப்பிட்ட சில கடமைகளைச் செய்ய’ தான் படைக்கப்பட்டுள்ளதாகப்
பிரகடனம் செய்தார். ஒரு வகையில் நமது பிரதமர் தன்னைத்தானே ஒரு இறைத் தூதராக உயர்நிலை
படுத்திக்கொண்டார் போலும்! ஆனால் இந்த மசோதாவுக்கான தொடக்க நடவடிக்கைகள், மிக வெகு
காலத்திற்கு முன்பே 1975ல், சர்வதேச அரங்கில் விவாதத்திற்கு வந்து விட்டது, ஏற்கனவே
பொது வெளியில் காணக் கிடைக்கிறது.
ஐக்கிய நாடுகள்
மன்றம் 1975ம் ஆண்டைச் சர்வதேச
பெண்கள் ஆண்டாக –(பெண்களுக்கு
இழைக்கப்- பட்ட) வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்யும் சர்வதேச முயற்சிக்கான விருப்பத்தின்
தொடக்கம் என்பதை நோக்கமாகக் கொண்டு– பிரகடனம் செய்தது. உலகத்து நாடுகளில் பெண்கள் அந்தஸ்து
நிலை குறித்து ஆவணப்படுத்துவதும் தொடங்கியது.
நமது நாட்டிலும்கூட (பெண்கள்) அந்தஸ்து நிலை குறித்த குழு (ஸ்டேடஸ் கமிட்டி), சமூகச் செயற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் புல்ரேணு குஹா (Dr. Phulrenu Guha)
சர்வதேசப் பெண்கள் மாநாடுகள்
அதன்பின், 1975 –1995 கால கட்டத்தின் பதின் ஆண்டுகளில் நடைபெற்ற நான்கு சர்வதேசப் பெண்கள் மாநாடுகளில் சமத்துவமின்மையால் பெண்கள் படும் துன்பங்களுக்கு எதிராக CEDAW
பீக்கிங் மாநாட்டில் இந்தியாவின் பஞ்சாயத் மற்றும் முனிசிபாலிட்டி தேர்தல்களில் பெண்களின் இடஒதுக்கீடு முறை பெரிதும் பாராட்டப்பட்டது; மேலும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட
எனினும்
இடஒதுக்கீட்டிற்கு எதிராக விமர்சனக் கருத்துக்களை ஸ்டேடஸ் கமிட்டியிடம் சமர்ப்பித்த
10 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்கள் அமைப்புகள் அதற்கு நேர் எதிரான காட்சியைச் சந்தித்தன. அந்தப்
பதின் ஆண்டுகளில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு விகிதம் 1977ல் 4%,
1980ல் 5%, 1984ல் 8%, 1989ல் 6%, 1991 மற்றும் 1996ல் 7 சதவீதமாகவும் இருந்தது. (அதாவது
எதிர்பார்த்ததுபோல பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை.)
இந்தியாவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா
கவலையளிக்கும் இந்நிலையின் பிரதிபலிப்புதான் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற மாதர் சம்மேளனத் தலைவர்
அதே மசோதா, அரசியலமைப்புச் சட்ட 81வது திருத்த மசோதா பெருமையுடன், 1996 செப்டம்பர் 12ல் மக்களவையில் ஐக்கிய முன்னணி அரசின் திரு தேவகௌடாவால் சமர்ப்பிக்கப்பட்டது.
மசோதாவுக்கு
ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஒட்டுமொத்தமாக 102மனுக்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பல அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சந்தித்த குழு அவர்களிடமிருந்து
கருத்துக்களைத் திரட்டியது. ஆயிரக் கணக்கான வேண்டுகோள் மனுக்கள் மசோதாவை அமல்படுத்துவதற்கு
ஆதரவாக வந்தன. மாணவர்கள், இல்லத்தரசிகள், சேவை வழங்குநர்களிடமிருந்து சேவைகளை நுகர்பவர்கள்
என அனைத்துத் தரப்பிலிருந்தும் பெண்கள் – “எனது இரத்தத்தால் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில் நாடாளுமன்ற
அடுத்த அமர்வில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன்” என்ற வாசகத்துடன் -- இரத்தத்தால் எழுதப்பட்ட
தபால் அட்டைகளை அனுப்பினர்.
இந்த அனைத்துக்
கடித்தங்களையும் குறிப்பிடும்போது கீதா‘டி (வங்க மொழியில் ‘கீதா அக்கா’ என மரியாதையுடன்
அழைப்பது, தமிழில் கீதா அம்மா என அழைப்பதைப் போல) உணர்ச்சிகரமாகிவிடுவது வழக்கம்:
அந்த உணர்ச்சியுடன் அவர், “பெண்கள் இயக்கத்தில் எனது நீண்ட ஆண்டுகள் அனுபவத்தில்,
அத்தகையவைகளை ஒருபோதும் நான் சந்தித்ததில்லை. மசோதாவை உடனடியாகச் சட்டமாக நிறைவேற்ற
வேண்டும் என லட்சக் கணக்கான பெருந்திரள் வேண்டுகோள்கள் பெண்கள் அமைப்புகளால் குழுவிடம்
அளிக்கப்பட்டன” என்று கூறினார்.
அறிக்கையைச் சமர்ப்பிக்கும் நேரம் வந்ததும், கூட்டுத் தேர்வுக் குழு அறிக்கையைச் சமர்ப்பித்து, அரசின் கவனத்திற்கு மசோதாவைக் கொண்டு வந்தது. ஆனால் அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்
தேசிய ஜனநாயகக்
கூட்டணி (என்டிஏ) அரசு 1999, 2002 மற்றும் 2003 என மூன்று முறை நாடாளுமன்றத்தில் இம்மசோதாவை
முன்வைக்க முயன்றது. யுபிஏ -1 அரசு 2008 மே 6ல் இம்மசோதாவை மாநிலங்களவையில்
தாக்கல் செய்தது. பின்னர் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு 2008 மே9ல் அனுப்பியது.
நிலைக் குழு தனது அறிக்கையை 2008 டிசம்பர் 17ல் அளித்தது. பிப்ரவரி 2010ல் மத்திய அமைச்சரவை
ஒப்புதல் கிடைத்ததும் 2010 மார்ச் 9ல் மாநிலங்களவையில் ஆதரவாக 186 வாக்குகள்
எதிராக ஒரு வாக்கு என பெரும்பான்மையில் மசோதாவை யுபிஏ1 அரசு நிறைவேற்றியது.
எனினும்,
“ஒரு மனதான ஆதரவு பற்றாக்குறை” என்று அழைக்கப்படும் காரணம் கூறி மசோதா மக்களவையில்
முன்வைக்கப்படவே இல்லை; அதனால் மக்களவையில் மசோதா பற்றிய விவாதமே நடைபெறவில்லை. ஆனால்,
அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பிய பிறகு 2023 செப்டம்பர்
18ல் திடீரென்று மசோதா மோடி அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றுள்ளது.
நமது கேள்வி
ஏன் மசோதாவின் தலைப்பு “நாரிசக்தி வந்தன்
அதினியம்” என்று மாற்றப்பட்டது?
நமது கோரிக்கைகள் வருமாறு
(1) பெண் தெய்வம் என உவமித்து வழிபாடு செய்யும்
வேடமிட்டு மறைத்தலின் கீழ் பெண்களை ஏமாற்றுவதை நிறுத்து. மனித ஜீவன்களாக பெண்களாகிய
நாங்கள் அனைவருடனும் வரிசையில் பிரதிநிதிகளாகச் சமமாக சேர்ந்து அமர விரும்புகிறோம்.
இந்த வகையில் இவ்வாறு, ‘வந்தனா’ (வணங்குதல் /தொழுதல்) என்ற வார்த்தை பயன்பாட்டை
நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்
(2)
மசோதாவின்
5வது ஷரத்து மக்களவை இடங்களின் தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பிறகு மசோதா அமலாக்கப்படும்
என்று கூறுகிறது; அதன் பொருள் மசோதா அந்தரத்தில் காலவரையறையின்றி நிற்கும் என்பதுதான்.
நாடாளுமன்ற இடங்களை மறுசீரமைக்கும் 2029ம்
ஆண்டுவரை மசோதா அமலாக்கப்பட காத்திருக்க வேண்டும். அவ்வாறெனில், இந்த ‘அரசியல் ஏமாற்றுத் தந்திரத்திற்கு” என்ன தேவை? பாஜகவின் நோக்கம் எதிர்வரும் 2024 பொதுத் தேர்தல்களின் விளிம்பில்
நிற்கும் மக்களை ஏமாற்றுவது தவிர வேறென்ன?
(3)
மாநிலங்களவை
மற்றும் மாநில சட்ட மேலவைகளுக்கு இடஒதுக்கீடுகள் குறித்து மசோதா என் மௌனம் சாதிக்கிறது? அங்கெல்லாம் பெண்களின் பங்கேற்பு என்னாவது?
(4)
மசோதா
தேசியத் தலைநகர் டெல்லி பிராந்தியம் குறித்துக் குறிப்பிடுகிறது. ஆனால் மற்ற ஒன்றிய
பிரதேசங்கள் (யூனியன் டெரிடரி) சொல்லப்படவில்லை எனில் அங்குப் பெண்களுக்கு இட
ஒதுக்கீடு இல்லையா?
(5)
மூன்று
அல்லது மூன்றுக்குக் குறைவான மக்களவைத் தொகுதி இடங்கள் உள்ள மாநிலங்களில் பெண்களுக்கு
இடஒதுக்கீடு எவ்வாறு அமலாக்கப்படும்? அந்த விஷயம் குறித்து மசோதா குறிப்பிடவில்லை.
ஆனால் தோழியர் கீதா முகர்ஜி 1996ல்
செலக்ட் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பிலிருந்த காலத்திலேயே மேற்கண்ட அனைத்துக்
கேள்விகளுக்கும் குறிப்பான சிபார்சுகளுடன் செலக்ட் குழுவின் அறிக்கையை அரசிடம்
சமர்ப்பித்துள்ளார். இப்போது ஒவ்வொருவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு
(ஓபிசி) பிரதிநிதித்துவ இடங்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கையை எழுப்புவதை நாம் பார்க்கிறோம்.
தோழியர் கீதா முகர்ஜி இந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
பதில் அளித்துள்ளார். ஒரிஜினல் தேர்தல் முறையில் கண்டவாறு எஸ்சி, எஸ்டி மற்றும் பிசி
வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு செய்தால் அவ்வகுப்பினர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள்.
மண்டல் கமிஷன் சிபார்சுகள் மீது நாட்டில் இயக்கங்கள் நடந்தபோது, சட்டத்தில் ஏன்
இந்த இடஒதுக்கீடு இணைத்து உறுதிப்படுத்தப்படவில்லை? அந்த நேரத்தில் இந்தக் கோரிக்கை
(ஓபிசி-களுக்கு இடஒதுக்கீடு) ஏன் எழுப்பப்படவில்லை? இது ஒவ்வொன்றுமே சால்ஜாப்பு
நாடகம். இது குட்டையைக் குழப்பி, பெண்களை அதிகாரப்படுத்தும் வாய்ப்பைத் தடுக்கும் ஒரு சூழ்ச்சிச்
செயல்திட்டம், அவ்வளவுதான்.
இன்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தோழியர் கீதா முகர்ஜியின் சந்தேகம் யாதெனில், சில சேர்க்கை/ நீக்கம் செய்யப்பட்டாலும்
எவ்வழியிலேனும் மசோதா மீது விவாதம் நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லையெனில்,
பெண்கள் ஒருபோதும் சட்டமன்றங்களை அடைய முடியாது. அந்த நேரத்தில் கீதா அம்மா இடஒதுக்கீட்டில் 25 சதவீதம்
வரையாவது அனுமதிக்க எப்படியோ தேவகௌடா அரசைச் சம்மதிக்கச் செய்தார். ஆனால் மசோதா மீது
விவாதம் நடந்தபோது சில இடதுசாரி பெண்கள் அமைப்புக்களின் ஒத்துழையாமை காரணமாக மசோதாவை
நிறைவேற்ற இயலவில்லை.
வரலாற்றில் கீதா முகர்ஜி
அதனால்தான் பெண்களை அதிகாரப்படுத்தல் மேலும் தாமதமாகலாம் என கீதா அம்மா அச்சப்பட்டார். அந்த அலட்சியம் 27 ஆண்டுகளை விலையாகக் கேட்டது. கீதா அம்மா விருப்பம் 2023 செப்டம்பர் 20 அந்த நாளில் நிறைவேறியது. நாடாளுமன்றத்தில்பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக நாங்கள், இந்திய மாதர் தேசியச் சம்மேளனம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடும் எதிர்ப்புக்
காரணமாக, தேவகௌடா அரசு மக்களவையில் இம்மசோதாவைக் கொண்டுவர இயலாதபோது பெண்கள் மற்றும்
குழந்தைகள் நல ஒன்றிய அமைச்சராக ஒன்றிய அரசில் இணையும்படி தோழியர் கீதா முகர்ஜியை வேண்டியபோது,
அவர் அதை மறுத்துவிட்டார். பாலினச் சமத்துவத்திற்காகப் போராடுவதில் கீதா அம்மாவின்
முயற்சிகள், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுட்ன் பிரிக்க முடியாதபடி இணைந்ததாகும்.
உச்சநீதி மன்றத்தில்
இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் இந்த மசோதாவுக்காக தனது போராட்டங்களை ஆர்ப்பாட்டங்கள்,
கையெழுத்து இயக்கம் எனத் தொடர்ந்தது. சமீபத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவிற்காக
உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது; உச்சநீதிமன்றம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்
நோட்டீஸ் அனுப்பியது. எப்போதெல்லாம் பெண்கள் இட ஒதுக்கீடு பிரச்சனை எழுந்தாலும் மாதர்
சம்மேளனத்தின் அத்தகைய முயற்சிகள் நிச்சயமாக வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறும்.
2023 செப்டம்பர் 5ல் நீதியரசர் சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு,
மக்களவையில் ஏன் மசோதா அறிமுகப்படுத்தவில்லை என்ற நோட்டீசிற்கு ஒன்றிய அரசு பதில் தாக்கல்
செய்வதில் அதன் தயக்கம் குறித்துக் கேள்வி கேட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் இந்த
அனைத்துத் தடைகளும் எப்போதும் உயிர்ப்புடன் இருந்தன.
ஒன்றிய அரசேகூட தோழியர் கீதா முகர்ஜியை மறந்தாலும், திமுக, தேசியவாதக் காங்கிரஸ் (என்சிபி)
உள்ளிட்ட கட்சிகளின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், மசோதா மீது மக்களவையில் நடந்த
விவாதத்தில் கீதா அம்மாவைத் தங்கள் உரைகளில் குறிப்பிட்டனர். உண்மையை நீண்ட
காலத்திற்கு இரகசியமாக மறைத்து வைக்க முடியாது.
அக்காரணத்தால்தான் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு
முன் நடந்த விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியும்கூட
மசோதா தொடர்பாகத் தோழியர் கீதா முகர்ஜியின் எடுத்துக் காட்டான முன்னோடி பங்களிப்பை
நினைவுகூர வேண்டியிருந்தது.
இந்த மசோதாவுக்காகப் போராடிய அனைத்துத் தனிநபர்கள்,
அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் (NFIW) மற்றும் மேற்கு வங்க மகிளா சமிதி (PBMS) சார்பாக நாங்கள் வாழ்த்திப் பாராட்டி வணங்குகிறோம்.
தோழியர் கீதா முகர்ஜி நீடூழி வாழ்க!
--நன்றி : நியூஏஜ் (அக்.8 –14)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
No comments:
Post a Comment